Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால்? – ட்ரம்ப்புக்கு மாநிலங்களவை எம்.பி கடிதம்
    தேசியம்

    அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால்? – ட்ரம்ப்புக்கு மாநிலங்களவை எம்.பி கடிதம்

    adminBy adminAugust 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால்? – ட்ரம்ப்புக்கு மாநிலங்களவை எம்.பி கடிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 09 Aug, 2025 10:36 AM

    Published : 09 Aug 2025 10:36 AM
    Last Updated : 09 Aug 2025 10:36 AM

    அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால்? – ட்ரம்ப்புக்கு மாநிலங்களவை எம்.பி கடிதம்
    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அசோக் குமார் மிட்டல்

    புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால் என்ன ஆகும்? என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கடிதம் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் அசோக் குமார் மிட்டல் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த கடிதத்தை அவர் எக்ஸ் தளத்தில் அண்மையில் பகிர்ந்திருந்தார். அதில் கூறியுள்ளதாவது: “ஆக.6-ம் தேதி உங்களின் அரசு நிர்வாகம் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 25% வரியை விதித்தது. ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து இந்தியா வாங்குவதைக் காரணம் காட்டி மொத்த வரியை 50% ஆக உயர்த்தி உள்ளீர்கள். நீண்ட கால கூட்டாண்மையைக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நடவடிக்கை மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

    இந்திய பொருளாதாரத்தை மாண்ட பொருளாதாரம் என்று நீங்கள் சொன்னீர்கள். ஆனால் இந்த மாண்ட பொருளாதாரம்தான் உலகின் 4-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு. விரைவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறும். உலக அளவில் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நாடு. அமெரிக்க நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 80 பில்லியன் டாலர்களை இந்திய சந்தையிலிருந்து ஈட்டுகின்றன. அமெரிக்காவின் டிஜிட்டல் பொருளாதாரம் இந்தியர்கள் எழுதும் கோடிங் அடிப்படையில் தான் இயங்குகிறது.

    அமெரிக்கா ரஷ்யாவிலிருந்து யுரேனியம் மற்றும் ரசாயனங்களை சத்தமின்றி இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா உடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமா?

    இதே ஆகஸ்ட் மாதத்தில் 1905-ம் ஆண்டு இந்தியாவில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. அது இந்திய பொருளாதாரத்தில் அந்நிய தேச செயல்பாடுகளை கட்டுப்படுத்தியது. 146 கோடி இந்தியர்கள் இன்று அந்த உணர்வை வெளிப்படுத்தி, அமெரிக்க வணிக நிறுவனங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால், அதன் தாக்கம் இந்தியாவை விட அமெரிக்காவிற்கு மிகவும் கடுமையானதாக இருக்கும். அதிபரே கருத்து வேறுபாட்டை விட பேச்சுவார்த்தை மேற்கொள்வதுதான் சிறந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.

    பேச்சுவார்த்தை இல்லை: வரிவிகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும்வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு கடந்த 7-ம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் 25 சதவீத வரி விதிப்பு 27-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US

    Google News

    தவறவிடாதீர்!




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் | பாகிஸ்தானின் 6 போர் விமானங்களை வீழ்த்தினோம்: இந்திய விமானப் படை தளபதி

    August 9, 2025
    தேசியம்

    மாநிலங்களவையில் தொடர் அமளியால் 53 மணி 21 நிமிட பணி நேரம் இழப்பு

    August 9, 2025
    தேசியம்

    பிப்ரவரி மாதம் கொண்டு வந்த வருமான வரி மசோதாவை திரும்ப பெற்றது மத்திய அரசு

    August 9, 2025
    தேசியம்

    முகநூலில் நட்பாக பழகிய 4 பெண்களிடம் மும்பையில் 2 ஆண்டுகளில் ரூ.9 கோடியை இழந்த முதியவர்

    August 9, 2025
    தேசியம்

    நாடாளுமன்றத்தில் சமோசா பிரச்சினையை எழுப்பிய பாஜக எம்.பி ரவி கிஷண் – நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

    August 9, 2025
    தேசியம்

    வெல்டிங் கடையில் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘எங்கள் கஷ்டத்தை புரிந்து கொள்ளவில்லை’ – எட்டயபுரம் அருகே அரசுப் பேருந்தில் ஏற மறுத்து போராடிய மாணவிகள்
    • உங்கள் வீட்டிற்கு அதிக செலவு இல்லாமல் பிரீமியம் உணர்வை வழங்க 5 எளிதான வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆபரேஷன் சிந்தூர் | பாகிஸ்தானின் 6 போர் விமானங்களை வீழ்த்தினோம்: இந்திய விமானப் படை தளபதி
    • காபி குடிக்கக் கூடாத 8 நபர்கள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உடல்நல அபாயங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாநிலங்களவையில் தொடர் அமளியால் 53 மணி 21 நிமிட பணி நேரம் இழப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.