Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பூஜ்ய வரி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
    தேசியம்

    அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பூஜ்ய வரி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

    adminBy adminMay 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பூஜ்ய வரி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளை பூஜ்யமாக குறைக்க இந்தியா முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறிய நிலையில் அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தோஹாவுக்கு சென்றுள்ள ட்ரம்ப் அங்குள்ள தொழிலதிபர்கள் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். அப்போது முதலாவதாக ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் ஆலையை தோஹாவில் அமைப்பது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அதன் பிறகு ட்ரம்ப் கூறுகையில், “இந்தியாவில் பொருட்களை விற்பனை செய்வது மிகவும் கடினமாக இருந்தது. எனவே, அவர்கள் எங்களிடம் எந்த வரியும் வசூலிக்க தயாராக இல்லாத ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்காவிடம் வழங்கியுள்ளனர்” என்றார்.

    அமெரிக்க அதிபர் இவ்வாறு கூறிய சில மணி நேரங்களில் இந்தியா சார்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கூறுகையில், “ இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இது மிகவும் சிக்கலான பேச்சுவார்த்தை. எனவே அதுகுறித்து இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் பரஸ்பரம் பயனளிக்க வேண்டும். அதற்கான பணிகளில்தான் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன” என்றார்.

    இதனிடையே காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “ அமெரி்க்க அதிபர் பூஜ்ய வரிவிதிப்பை இந்தியா ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கிறார். நமது பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மவுனம் காக்கிறார். இதற்கும், சிந்தூர் ஆபரேஷன் நிறுத்தத்துக்கும் என்ன தொடர்பு? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    அமெரிக்காவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. மேலும், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பிலும் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்கத்துக்கான எதிர்சமநிலையாகவும் இந்தியா உள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    முன்னாள் வெளியுறவு செயலர் உட்பட மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்

    July 14, 2025
    தேசியம்

    ‘உங்களது அரசமைப்பு பற்று போற்றத்தக்கது’ – நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் வாழ்த்து

    July 13, 2025
    தேசியம்

    டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த சொகுசு கார்: நள்ளிரவில் பயங்கர சம்பவம்

    July 13, 2025
    தேசியம்

    பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: வெளிநாட்டினர் அதிகம் கண்டறியப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல்

    July 13, 2025
    தேசியம்

    ஏமனில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.8.60 கோடி குருதிப் பணம் தர செவிலியர் நிமிஷா பிரியா குடும்பத்தார் முயற்சி

    July 13, 2025
    தேசியம்

    நாய் கடித்ததால் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற 95 வயது மூதாட்டி

    July 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முன்னாள் வெளியுறவு செயலர் உட்பட மாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்களை நியமித்தார் குடியரசு தலைவர்
    • இந்தி படங்களை பின்னுக்குத் தள்ளி ‘சூப்பர்மேன்’ வசூல் சாதனை!
    • ‘மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது’ – மு.க.ஸ்டாலின்
    • ‘சோரே ஜஹான் சே அஹா…’: சுபன்ஷு சுக்லாவின் பேச்சு ஐ.எஸ்.எஸ். – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.