Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து
    தேசியம்

    அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து

    adminBy adminSeptember 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: அமெரிக்​கா​விடம் இந்​தியா மன்​னிப்பு கோர வேண்​டிய அவசி​யமில்லை என காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​து உள்​ளார். ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் உக்​ரைன் போருக்கு இந்​தியா மறை​முக​மாக உதவுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்​றம்​சாட்​டி​னார். ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை குறைத்​துக் கொள்ள வேண்​டும் என்ற அமெரிக்​கா​வின் கோரிக்​கையை இந்​தியா நிராகரித்த​து.

    இதையடுத்​து, இந்​திய பொருட்​களுக்கு அமெ ரிக்கா 50% வரி விதித்​தது. இதனால் ஜவுளி, மீன் உள்​ளிட்ட பொருட்​கள் ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், சீனா​வில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்றார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங்கை சந்​தித்​துப் பேசி​னார்.

    இதையடுத்​து, பிரதமர் மோடி எப்​போதும் எனது நண்​பர்​தான் என்​றும் ஆனால் அவரின் சில நடவடிக்​கைகளை நான் விரும்​ப​வில்லை என்​றும் ட்ரம்ப் கூறி​யிருந்​தார். இது​போல இந்​தி​யா, அமெரிக்கா இடையே நல்ல நட்​புறவு உள்​ளது. அதுபற்றி கவலைப்​படத் தேவை​யில்லை என்​றும் ட்ரம்ப் கூறி​யிருந்​தார்.

    இந்த சூழலில், அமெரிக்க வர்த்தக அமைச்​சர் ஹோவார்டு லுட்​னிக் கூறும்​போது, “ஓரிரு மாதங்​களfல் இந்​தியா விரை​வில் பேச்​சு​வார்த்​தைக்கு வரும். அப்​போது அவர்​கள் மன்​னிப்பு கோரி​விட்​டு, அதிபர் ட்ரம்​புடன் வர்த்தக ஒப்​பந்​தத்தை மேற்​கொள்​வார்​கள்” என்​றார்.

    இதற்கு பதிலடி தரும் வகை​யில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் கூறும்​போது, “இந்​தி​யா​வை​விட சீனா​வும் துருக்​கி​யும் அதிக அளவில் ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வா​யுவை வாங்​கு​கிறது. இது​போல ஐரோப்​பிய யூனியன் நாடுகளும் ரஷ்​யா​விட​மிருந்து சில பொருட்​களை இறக்​குமதி செய்​கின்​றன. ஆனாலும், அந்த நாடு​களை​விட இந்​தி​யா​வுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்​திருக்​கிறது. இது அமெரிக்​கா​வின் தவறான கொள்​கை.

    அமெரிக்​காவைப் போலவே இந்​தி​யா​வும் இறை​யாண்மை கொண்ட நாடு என்​பதை லுட்​னிக் புரிந்து கொள்ள வேண்​டும். அவர்​கள் சொந்த இறை​யாண்மை முடிவு​களை எடுக்​கலாம். நாமும் நமது இறை​யாண்மை முடிவு​களை எடுக்​கலாம். இந்த விவ​காரத்​தில் இந்​தியா மிகுந்த முதிர்ச்​சி​யுடன் நடந்து கொண்​டுள்​ளது.

    எனவே, அமெரிக்​கா​விடம் மன்​னிப்பு கோரு​வதற்கு எது​வும் இல்​லை. இன்​னும் சொல்​லப் போனால், அமெரிக்​கா​வின் முந்​தைய நிர்​வாகம்​தான் (ஜோ பைடன்) ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்க இந்​தி​யாவை ஊக்​கு​வித்​தது. சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய் விலையை நிலை​யாக வைத்​திருக்க இந்த நடவடிக்​கை உதவும்​ என முந்​தைய அரசு கருதியது” என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஜம்மு காஷ்மீரில் 2வது நாளாக துப்பாக்கிச் சூடு: 2 வீரர்கள் உயிரிழப்பு, 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    September 9, 2025
    தேசியம்

    ம.பி.யில் தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    September 9, 2025
    தேசியம்

    கடல் முதல் மலை வரையிலான எல்லைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க திட்டம்

    September 9, 2025
    தேசியம்

    கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டர் கட்டணம் ரூ. 5,000 வரை உயர்வு – தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகரிப்பு

    September 9, 2025
    தேசியம்

    50 நாட்களாக மவுனம் காக்கும் ஜெகதீப் தன்கர் பேச வேண்டுமென நாடு காத்திருக்கிறது: காங்கிரஸ்

    September 9, 2025
    தேசியம்

    திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக அனில் குமார் மீண்டும் நியமனம்

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “சூழ்ச்சி அரசியலால் தமிழக வளர்ச்சியை தடுக்க முடியவில்லை” – முதல்வர் ஸ்டாலின்
    • ஆரோக்கியமான முள்ளங்கி வளர்ச்சியைத் தவிர்க்க பொதுவான தோட்டக்கலை தவறுகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அமமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: நிர்வாகிகளுக்கு அழைப்பு
    • யுனெஸ்கோ 2025 இல் 26 புதிய உலக பாரம்பரிய தளங்களைச் சேர்க்கிறது: உலகளாவிய அங்கீகார பட்டியலில் இந்தியாவின் மராட்டிய இராணுவ நிலப்பரப்புகளும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஜம்மு காஷ்மீரில் 2வது நாளாக துப்பாக்கிச் சூடு: 2 வீரர்கள் உயிரிழப்பு, 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.