Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அமித் ஷா குரலில் பேசி முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.4 கோடி மோசடி: உறவினர் 5 பேர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப் பதிவு
    தேசியம்

    அமித் ஷா குரலில் பேசி முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.4 கோடி மோசடி: உறவினர் 5 பேர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப் பதிவு

    adminBy adminSeptember 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அமித் ஷா குரலில் பேசி முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.4 கோடி மோசடி: உறவினர் 5 பேர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப் பதிவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புனே: முன்னாள் வங்கி ஊழியரை, அவரது உறவினர் ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்துள்ளார். இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் குரலில் மர்ம நபர்களையும் கான்பரன்ஸ் அழைப்பில் பேசவைத்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த முன்னாள் வங்கி ஊழியர் சூர்யகாந்த் தோரட்(53). இவரை, அவரது உறவினர் ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு தொடர்பு கொண்டு, தனது மகன் உளவுத்துறையில் பணியாற்றுவதாக கூறியுள்ளார். அத்துறையின் சிறப்பு திட்டத்தில் முக்கிய பங்காற்றியதால் தனது மகனுக்கு மத்திய அரசு ரூ.38 கோடி பரிசளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இந்த பரிசை பெறுவதற்கு செயல்முறை கட்டணம், வழக்கறிஞர் கட்டணம், மூத்த அதிகாரிகளுக்கு பரிசு வழங்குவதற்காக தனக்கு பணம் தேவைப்படுவதாக சூர்யகாந்திடம் கூறியுள்ளார். இவரை நம்ப வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் குரலில் பிற நபர்களை கான்பரன்ஸ் அழைப்பிலும் பேசவைத்துள்ளார். பரிசு பணம் கிடைத்தவுடன் வாங்கும் பணத்தை திருப்பி தருவதாக சூர்யகாந்திடம் உறவினர் கூறியுள்ளார்.

    இதை நம்பி கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை தனது உறவினரின் பல வங்கி கணக்குகளில் சூர்யகாந்த் ரூ.4 கோடி-க்கு மேல் பணம் அனுப்பியுள்ளார். தனது சேமிப்பு பணத்தை மட்டும் கொடுக்காமல், தனது சொத்துக்களையும் விற்றும் பணம் வழங்கியுள்ளார். உறவினரிடம் சூர்யகாந்த் பணத்தை திருப்பி கேட்டபோது, மகன் சிறப்பு பணிக்காக வெளிநாடு சென்றிருப்பதாக கூறியுள்ளார். உறவினர் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த சூர்யகாந்த் இது குறித்து போலீஸில் புகார் அளித்தார்.

    இது குறித்து சூர்யகாந்த கூறுகையில், உறவினரே முதுகில் குத்துவார் என எதிர்பார்க்கவில்லை. மகனின் ஐ.டி.கார்டு, ரிவால்வர், வங்கியிலிருந்து வந்ததாக அனுப்பிய தகவல் ஆகியவற்றை அனுப்பியும், அமித் ஷா, அஜித் தோவல் போன்ற பிறரை கான்பரன்ஸ் அழைப்பில் பேசவைத்தும் என்னை நம்ப வைத்து விட்டார்’’ என்றார். இந்த மோசடி தொடர்பாக மகாராஷ்டிரா பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிரதமர் மோடியின் ‘சுதேசி’ கோரிக்கைக்கு ஆதரவு: ஜோஹோ தளத்துக்கு மாறிவிட்டதாக மத்திய அமைச்சர் தகவல்

    September 24, 2025
    தேசியம்

    பாஜக எம்.பி.யின் மனைவியிடம் டிஜிட்டல் கைது மோசடி செய்து பறித்த ரூ.14 லட்சத்தை மீட்ட கர்நாடக போலீஸார்

    September 24, 2025
    தேசியம்

    கடந்த 5 ஆண்டுகளில் ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்த 289 தொழிலாளர்கள் உயிரிழப்பு

    September 24, 2025
    தேசியம்

    கொல்கத்தாவில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: மின்சாரம் தாக்கி மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு

    September 24, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    September 24, 2025
    தேசியம்

    நவராத்திரி நடனங்களில் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை: விஎச்பி அறிவிப்பால் வட மாநிலங்களில் சர்ச்சை

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மாடுகளுக்கு ஆபத்தான 8 உணவுகள் மற்றும் அதற்கு பதிலாக அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரதமர் மோடியின் ‘சுதேசி’ கோரிக்கைக்கு ஆதரவு: ஜோஹோ தளத்துக்கு மாறிவிட்டதாக மத்திய அமைச்சர் தகவல்
    • டிஎஸ்பியை கைது  செய்ய உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை: நீதிமன்றம் உத்தரவு
    • பராக் ஒபாமா 102 வயதான பெண்ணை சந்திக்கிறார்: அவரது எளிய உணவு ரகசியங்கள் வைரலாகி, நீண்ட ஆயுள் பாடங்கள் மற்றும் வாழ்க்கை உதவிக்குறிப்புகளுடன் மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்துகின்றன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாஜக எம்.பி.யின் மனைவியிடம் டிஜிட்டல் கைது மோசடி செய்து பறித்த ரூ.14 லட்சத்தை மீட்ட கர்நாடக போலீஸார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.