Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அனைத்து போர்க்கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
    தேசியம்

    அனைத்து போர்க்கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

    adminBy adminAugust 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அனைத்து போர்க்கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்திய கடற்படைக்கு தேவையான அனைத்து போர்க்கப்பல்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

    பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: உலகளவில் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள் சவால்கள் நிறைந்தவைகளாக உள்ளன. இந்நேரத்தில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் நாம் தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும்.

    இந்திய கடற்படையில் சில நாட்களுக்கு முன் இணைந்த ஐஎன்எஸ் ஹிம்கிரி மற்றும் உதய்கிரி போர்க்கப்பல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. புதிய போர்க்கப்பல்கள் 75 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. இது நாட்டின் பாதுகாப்பு சுதந்திரத்தை வலுப்படுத்தும்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையிலும், பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வான் பாதூப்பு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை உலக நாடுகள் பார்த்தன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் உட்பட அனைத்து ஆயுதங்களும் துல்லிய தாக்குதல் நடத்தின. தொலைநோக்கு, நீண்ட கால தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றியடைய முடியாது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை சில நாள் போராக இருக்கலாம். ஆனால், இதில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி, பாகிஸ்தானுக்கு கிடைத்த தோல்விக்கு பின்னால், பல ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தயார் நிலை ஆகியவை உள்ளன.

    கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.700 கோடிக்கும் குறைவாக இருந்தது. தற்போது அது ரூ.24,000 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது. தற்போது இந்தியா ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடாக இல்லாமல் ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது. இந்த அணுகுமுறை வரும் காலங்களில் நாட்டை பாதுகாப்பாகவும், உலக நாடுகள் இடையே முன்னணியிலும் வைத்திருக்கும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    எல்லையில் பல ஆண்டு காலமாக ஊடுருவலுக்கு உதவிய ‘மனித ஜிபிஎஸ்’ தீவிரவாதி பகு கான் சுட்டுக் கொலை

    September 1, 2025
    தேசியம்

    இமாச்சலில் பருவமழை சீற்றம்: 320 பேர் உயிரிழப்பு, 819 சாலை மூடல்

    September 1, 2025
    தேசியம்

    ராகுல் பின்னால் நிற்க மம்தா விரும்பவில்லை: ஆதிர் ரஞ்சன் சவுத்திரி குற்றச்சாட்டு

    September 1, 2025
    தேசியம்

    சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நிலுவை: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தகவல்

    September 1, 2025
    தேசியம்

    தெருநாய் வழக்கால் உலகம் முழுக்க பிரபலமாகி விட்டேன்: உச்ச நீதிமன்ற நீதிபதி நகைச்சுவை பேச்சு

    September 1, 2025
    தேசியம்

    இயற்கை பேரிடரிலும் 2 சாதனை படைத்த காஷ்மீர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தாய்ப்பால் கொடுப்பது பெண்களுக்கு தீங்கு விளைவிக்கிறதா? சிறந்த அமெரிக்க டாக் விளக்குகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வானியலாளர்கள் வெளிப்படுத்திய பைனரி கருந்துளைகளுக்குப் பின்னால் உள்ள ‘மர்மமான ராட்சத’ | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
    • சாட்ஜ்ட் தனது புற்றுநோய் அறிகுறிகளை தவறவிட்டார்! ஐரிஷ் அப்பா இப்போது நான்காம் கட்டத்தில்; உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கனடாவின் சந்திர கனவு: முதல் மூன் ரோவர் துவக்கத்திற்கு வெளியிடப்பட்டார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.