Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் மாறுவதை தடுக்காமல் காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: அசாம் முதல்வர் குற்றச்சாட்டு
    தேசியம்

    அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் மாறுவதை தடுக்காமல் காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

    adminBy adminJune 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் மாறுவதை தடுக்காமல் காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: அசாம் முதல்வர் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ‘‘​பாகிஸ்​தான் அணு ஆயுத நாடாவதை தடுக்​காமல் காங்​கிரஸ் வரலாற்று தவறிழைத்து விட்​டது’’ என்று அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்​றம் சாட்​டி​யுள்​ளாார். அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தனது எக்ஸ் வலைதள பக்​கத்​தில் ஒரு பதிவை வெளி​யிட்​டுள்​ளார்.

    “காங்​கிரஸின் வரலாற்று தவறு: பாகிஸ்​தான் அணு ஆயுத நாடாக மாறு​வதற்கு இந்​தியா எப்​படி விட்​டது’’ என்ற தலைப்​பில் அவர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1980-களில் பாகிஸ்​தான் அணு ஆயுதம் தயாரிக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வந்​தது. அதை இந்​தி​யா​வின் ‘‘ரா’’ உட்பட உளவு துறை​கள் உறு​திப்​படுத்​தின. பாகிஸ்​தான் கவுதா என்ற பகு​தி​யில் அணுஆ​யுத தயாரிப்பு கூடத்தை அமைத்து வந்​தது. அங்கு யுரேனி​யத்தை செறிவூட்​டும் பணி​கள் நடை​பெற்​றன.

    அந்த நேரத்​தில் அதை தடுக்க இந்​தி​யா​வுக்கு இஸ்​ரேல் உதவ முன் வந்​தது. அதற்​காக குஜ​ராத் மாநிலம் ஜாம்​நகர் விமானப் படைதள​மும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டது. அதற்கு இந்​திய ராணுவ​மும் ஆதரவு அளித்​தது. அங்​கிருந்து கவுதா பகு​தியை தாக்கி அணு ஆயுத தயாரிப்பு முயற்​சியை தடுக்க இந்​தி​யா​வுக்கு உதவு இஸ்​ரேல் தயா​ராக இருந்​தது.

    பாகிஸ்​தான் அணு ஆயுத நாடாக மாறு​வதற்கு முன்பே அதை தடுத்து நிறுத்​தம் வலிமை இந்​தி​யா​விடம் இருந்​தது. ஆனால், கடைசி நேரத்​தில் அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி தயக்​கம் காட்​டி​னார். சர்​வ​தேச நாடு​களுக்​குப் பயந்து தாக்​குதல் நடத்​தாமல் விட்​டு​விட்​டார்.

    அதன்​பின்​னர் பிரதம​ரான ராஜீவ் காந்​தி​யும், கவு​தா​வில் நடை​பெற்ற பணி​களை தடுக்க தவறி​விட்​டார். சர்​வ​தேச நாடு​களின் அழுத்​தத்​தின் காரண​மாக தூதரக ரீதி​யாக பேச வேண்​டும் என்று கூறி​விட்​டார். கடைசி​யில் கடந்த 1988-ம் ஆண்டு அணுஆ​யுத தளங்​களை பரஸ்​பரம் தாக்​கு​வ​தில்லை என்ற ஒப்​பந்​தத்​தில் பாகிஸ்​தானின் அப்​போதைய பிரதமர் பெனசிர் புட்டோ அரசுடன் ராஜீவ் காந்தி கையெழுத்​திட்​டார்.

    அதன்​பின்​னர் 10 ஆண்​டு​கள் கழித்து 1998-ம் ஆண்டு பாகிஸ்​தான் அணுஆ​யுத சோதனை நடத்​தி​யது. இப்​போது, அதிக செல​வாகும் அணுஆ​யுத போட்​டி​யில் இந்​தியா தள்​ளப்​பட்​டுள்​ளது. மேலும், அணுஆ​யுதத்தை கேடய​மாகப் பயன்​படுத்​திக் கொண்டு கார்​கில் ஊடுரு​வல், எல்லை தாண்​டிய தீவிர​வாத தாக்​குதல் போன்​றவற்றை பாகிஸ்​தான் தொடர்ந்து செய்து வரு​கிறது. இப்​போதும் கூட சர்​வ​தேச நாடு​களின் நடவடிக்​கைகளை தடுக்க அணு ஆயுத பலத்தை காட்டி பாகிஸ்​தான் மிரட்டி வரு​கிறது.

    வலிமை​யான தலைமை என்​பது சிக்​கலுக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும். அதே​நேரத்​தில் தொலைநோக்கு பார்​வை​யும் இருக்க வேண்​டும். ஆனால், நல்ல வாய்ப்பை காங்​கிரஸ் அரசு வீணாக்​கி​விட்​டது. நாட்​டின் நீண்ட கால பாது​காப்பை கருத்​தில் கொள்​ளாமல், குறுகிய கால தூதரக ஒப்​பந்​தத்தை காங்​கிரஸ் அரசு செய்து கொண்​டது. இவ்​வாறு அசாம்​ முதல்​வர்​ ஹிமந்​த பிஸ்​வா சர்​மா கூறியுள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மதம் மாற்றி தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த உ.பி.யில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிர தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து

    July 1, 2025
    தேசியம்

    தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?

    July 1, 2025
    தேசியம்

    தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  

    July 1, 2025
    தேசியம்

    65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா

    July 1, 2025
    தேசியம்

    வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை இடையே மோதல்: ரூ.100 கோடி சாலையின் நடுவே மரங்கள்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வாலிபாலில் சென்னை ஐசிஎஃப் அணி வெற்றி!
    • சென்னை துறைமுக கப்பல் முனையம் ரூ.19.25 கோடியில் மேம்பாடு: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார்
    • 2024-25 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்வு: 5 ஆண்டுகளில் இரட்டிப்பானது
    • இந்த பொதுவான செரிமான பிரச்சினை ஒரு அரிய புற்றுநோயின் எச்சரிக்கை அடையாளமாக இருக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மதம் மாற்றி தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த உ.பி.யில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.