புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட 14 வகையான விசாக்களை மத்திய அரசு ரத்து செய்தது.
அவர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் காலக் கெடு விதித்தது. அதன்படி கடந்த 29-ம் தேதி கெடு முடிந்தது. அன்றைய தினம் இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்கள் பஞ்சாப் மாநிலம் அட்டாரி – வாகா எல்லை வழியாக வெளியேறினர். அதேபோல் பாகிஸ்தானில் இருந்து 1,376 இந்தியர்கள் தாய்நாடு திரும்பினர்.