Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, January 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அடுத்த அதிரடி – பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு இந்தியா தடை!
    தேசியம்

    அடுத்த அதிரடி – பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு இந்தியா தடை!

    adminBy adminMay 3, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அடுத்த அதிரடி – பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு இந்தியா தடை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து அனைத்துவிதமான இறக்குமதிகளுக்கும் தடை என்ற உத்தரவை இந்தியா பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே, அங்கிருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு தடை என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரைவழி, வான்வழி என எந்த விதத்திலும் பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்கள் ஊக்குவிக்கப்படாது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிகிறது.

    பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ராணுவ நடாடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்தியா அடுத்தடுத்த நடவடிக்கைகளை அவிழ்த்து விடுகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில், லஷ்கர் -இ-தொய்பா திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, 1. சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம், 2. அட்டாரியில் உள்ள சோதனைச்சாவடி மூடல் 3. சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். 4. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். 5. இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து உள்ளிட்ட ஐந்து நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து வான்வழி பயன்பாட்டில் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் வந்தவண்னம் உள்ளன.

    அந்த வகையில் பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் தடை விதித்து இந்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவில் பாகிஸ்தான் கொடியை தாங்கிய எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவற்றில் பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கான தடை உத்தரவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2024 – 2025 ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்தியா 447.65 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதிகளை செய்துள்ளது. அதேசமயம் வெறும் 0.42 யுஎஸ் டாலர் மதிப்பிலான சொற்பமான அளவிலேயே இறக்குமதி செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

    சற்றும் தளராத பாகிஸ்தான்! – பாகிஸ்தானுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும் என்ற கணிப்பில் இந்தியா இறக்குமதி தடையை அமல்படுத்தினாலும் கூட பாகிஸ்தான் பதறுவதாகத் தெரியவில்லை. இந்தியாவின் உடனடி 5 நடவடிக்கைகளுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்தியாவுடனான வர்த்தகத்தை முறித்துக் கொள்வதாகக் கூறியது.

    மேலும், இன்று (மே 3) 450 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கக் கூடிய அதிநவீன ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ராணுவம் பலமாக இருப்பதை உறுதி செய்யவும், நவீன ஆயுதங்களின் தரநிலையை பரிசோதனை செய்யவும் இந்தச் சோதனையை மேற்கொண்டதாகக் கூறியுள்ளது.

    ‘புவி அரசியலில் ஒரு ஷிஃப்ட்’ – அமெரிக்கா – சீனா நிகழ்த்திய வர்த்தகப் போர் விவகாரம் சற்றே இளைப்பாறும் சூழலில், இப்போது இந்தியா – பாகிஸ்தான் நடத்திக் கொள்ளும் போட்டாப் போட்டி நடவடிக்கைகள் புவி அரசியலில் கவனம் பெற்றுள்ளது. ட்ரம்ப் வரி விவகாரங்கள் தணிந்துள்ள நிலையில் அமெரிக்கா தற்போது இந்தியா – பாக். விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தொடங்கியுள்ளது.

    அமெரிக்க வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் டாமி புரூஸ் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசுகையில், “பஹல்​காமில் நடந்த தீவிர​வாத தாக்​குதலுக்​குப் பிறகு இந்​தியா – பாகிஸ்​தான் இடையே பதற்​றம் எழுந்​திருக்கிறது. இரு நாடு​களின் வெளி​யுறவுத் துறை அமைச்​சர்​களு​டன் அமெரிக்க வெளி​யுறவுத் துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ 2 நாட்​களுக்கு முன்​னர் தொலைபேசி​யில் பேச்​சு​வார்த்தை நடத்தி உள்​ளார்.

    இந்​தி​யா​வும் பாகிஸ்​தானும் போர் பதற்​றத்தை தணிக்க வேண்​டும் என்று அப்​போது அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார். மேலும், பஹல்​காம் தாக்​குதல் தொடர்​பாக இந்​தி​யா​வுடன் நேரடி பேச்​சு​வார்த்தை நடத்த வேண்​டும் என்று பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்​பிடம் மார்கோ ரூபியோ வலி​யுறுத்தி கூறி​யுள்​ளார்.

    அமெரிக்​கா​வின் பல்​வேறு துறை​களை சேர்ந்த அதி​காரி​களும் இந்​தியா – பாகிஸ்​தான் அதி​காரி​களு​டன் தொடர்ந்து பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர். இரு​ நாடு​களும் சமுக​ தீர்வை காண வேண்​டும். எனினும், இரு நாடு​களுக்கு இடை​யில் நடை​பெறும் நடவடிக்​கைகளை உன்​னிப்​பாக கண்​காணித்து வரு​கிறோம்” என்று கூறியிருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘மோடியை பழிப்பது சுலபம்; ஆனால்…’ – ராகுலை விமர்சித்த ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம்

    December 3, 2025
    தேசியம்

    “அடுத்து மேற்கு வங்கத்திலும் காட்டாட்சியை அகற்றுவோம்” – பிரதமர் மோடி உறுதி

    December 3, 2025
    தேசியம்

    பிஹாரில் தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களில் வெற்றி

    December 3, 2025
    தேசியம்

    பிஹார் பெண்களின் ஞானமே என்டிஏ வெற்றிக்கு காரணம்: பாஜக மூத்த தலைவர் விளக்கம்

    December 3, 2025
    தேசியம்

    டெல்லி கார் குண்டுவெடிப்பு: புல்வாமாவில் மருத்துவர் உமர் நபியின் வீடு இடிப்பு

    December 3, 2025
    தேசியம்

    ‘பரகாமணி’ திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த தேவஸ்தான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மர்ம சாவு: போலீஸார் விசாரணை

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களில் ஜப்பானிய வீடுகள் எவ்வாறு மீட்டமைக்கப்படுகின்றன: மைக்ரோ-ரீசெட்டின் மந்திரத்தைப் புரிந்துகொள்வது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இமாச்சல பிரதேசம்: ஜனவரி 14 முதல் சிம்லாவை குலு மற்றும் கின்னூருடன் இணைக்க தினசரி ஹெலிகாப்டர் சேவைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புளூட்டோ சூரியனைச் சுற்றி வர 248 ஆண்டுகள் ஆகும், அது 2178 இல் தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்யும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த அரிய இமாலய மலர் அதிர்ஷ்டத்தைத் தருவதாகக் கூறப்படுகிறது – வீட்டில் புனிதமான பிரம்ம கமலத்தை வளர்ப்பது எப்படி? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வரலாற்றில் ஜனவரி 12 அன்று நடந்தது: ஆண்டுகளில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.