Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அகமதாபாத் விமான விபத்து: மருத்துவக் கல்லூரி விடுதி சேதமும், துயர்மிகு காட்சிகளும்!
    தேசியம்

    அகமதாபாத் விமான விபத்து: மருத்துவக் கல்லூரி விடுதி சேதமும், துயர்மிகு காட்சிகளும்!

    adminBy adminJune 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அகமதாபாத் விமான விபத்து: மருத்துவக் கல்லூரி விடுதி சேதமும், துயர்மிகு காட்சிகளும்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதியுள்ளது. அங்கு, உணவுடன் கூடிய தட்டுகள் மற்றும் தண்ணீர் டம்ளர்கள் மேசையில் மீது இருப்பது தொடர்பான புகைப்படங்கள் காண்போரை கண்கலங்க செய்துள்ளது.

    குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு இன்று மதியம் 1.38-க்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-7 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விமானத்தில், பயணித்த 242 பேரில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுக்கீசிய நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அகமதாபாத்தின் மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விமானம் மோதியதில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இதில் நான்கு பேர் இளங்கலை மாணவர்கள் மற்றும் ஒருவர் முதுகலை மாணவர் என்றும் கூறப்படுகிறது.

    மாணவர்கள் உணவு சாப்பிடும் நேரத்தில் விடுதி மீது விமானம் விழுந்துள்ளதாக தெரிகிறது. உணவுடன் கூடிய தட்டுகள் மற்றும் தண்ணீர் டம்ளர்கள் மேசையில் மீது இருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம், பல கனவுகளை சுமந்து திரிந்த, அம்மாணவர்களின் துயர நிலையை எடுத்துரைக்கிறது.

    அகமதாபாத் விமான விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களை பெற ஏர் இந்தியா 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆதரிப்பதே இப்போது முதன்மையானது என்று ஏர் இந்தியாவின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். “அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து கடும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மீட்புப் பணிகள் குறித்து தொடர் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    “இந்தியாவுக்கு 2025 பயங்கரமான ஆண்டாக மாறுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தானுடனான போர், பெங்களூருவில் கூட்ட நெரிசல், உள்ளூர் குற்றங்கள் மற்றும் இப்போது அகமதாபாத் விமான விபத்தில் பலர் இறந்துள்ளனர்,” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். | முழுமையாக வாசிக்க > அகமதாபாத்தில் 242 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து – மீட்புப் பணிகள் தீவிரம்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹார் மாநிலத்தில் இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் தொழிற்பயிற்சி

    July 3, 2025
    தேசியம்

    இந்தியா – அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்

    July 3, 2025
    தேசியம்

    தீவிரவாத தாக்குதலில் 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மாலி அரசுக்கு இந்தியா கோரிக்கை

    July 3, 2025
    தேசியம்

    ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

    July 3, 2025
    தேசியம்

    ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க மசோதா குறித்து ஜெய்சங்கர் கருத்து

    July 3, 2025
    தேசியம்

    ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிஹார் மாநிலத்தில் இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் தொழிற்பயிற்சி
    • ‘ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு’ – அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த நபர் டிஜிபிக்கு கோரிக்கை
    • பாரிஸ் பேஷன் வீக்: இந்தூரின் கடைசி மகாராஜா வேல்ஸ் பொன்னரின் பாரிஸ் பேஷன் வீக் நிகழ்ச்சி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியா – அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
    • ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் பொறி வைத்துப் பிடித்த பென் ஸ்டோக்ஸ்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.