Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை
    தேசியம்

    அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை

    adminBy adminJune 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பயணிகள் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி உள்ளன.

    இதையடுத்து, விபத்து நடந்த இடங்களில் சிதறி உள்ள உடல் பாகங்களை சேகரிக்கும் பணியில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அந்த பாகங்களின் மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    விபத்தில் இறந்த பயணிகளின் உறவினர்கள் பலர் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை வழங்கி வருகின்றனர். அத்துடன், விமான பயணிகளின் உடைமைகளை வைத்தும் அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

    எனினும் பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகி உள்ளதால், டிஎன்ஏ பரிசோதனையை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். அதற்காக அகமதாபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்தில் பலர் குவிந்துள்ளனர்.

    போலீஸார் கூறும்போது, ‘‘இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம்காணப்பட்டுள்ளன. அவர்களுடைய உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1,853 கோடியில் நான்கு வழிச் சாலை திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 2, 2025
    தேசியம்

    ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

    July 1, 2025
    தேசியம்

    பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    July 1, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 1, 2025
    தேசியம்

    பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கூடுதல் இடம் கொடுக்கப்படுமா? – முதல்வர் ஸ்டாலின் பதில்
    • அரசே தனது குடிமகனை கொலை செய்துள்ளது: அஜித்குமார் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?
    • பள்ளி கல்வித்துறை பணியாளர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு: ஜூலை 8, 9-ம் தேதிகளில் நடைபெறுகிறது
    • கடமை தவறி குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை: அஜித்குமாரின் தாயாரிடம் போனில் வருத்தம் தெரிவித்தார் முதல்வர்
    • “மாரி செல்வராஜ் விரைவில் பான் இந்தியா படம் இயக்க வேண்டும்” – இயக்குநர் ராம் விருப்பம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.