Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»82-வது வருடத்தில் ‘காரைக்கால் அம்மையார்’!
    சினிமா

    82-வது வருடத்தில் ‘காரைக்கால் அம்மையார்’!

    adminBy adminSeptember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    82-வது வருடத்தில் ‘காரைக்கால் அம்மையார்’!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அறுபத்து மூன்று நாயன்மார்களில், மூன்று பேர் பெண்கள். அவர்களில் மூத்தவர், காரைக்கால் அம்மையார். சிறந்த சிவபக்தரான அவரைப் பற்றிய புராணக்கதையை மையப்படுத்தி உருவான படம், ‘காரைக்கால் அம்மையார்’. சி.வி.ராமன் தனது கந்தன் கம்பெனி சார்பில் தயாரித்து இயக்கிய படம் இது. பாபநாசம் சிவன் இசை அமைத்தார்.

    வி.ஏ.செல்லப்பா, பி.சரஸ்வதி, கே.சாரங்கபாணி, கே.ஆர்.செல்லம், காளி என்.ரத்தினம், டி.எஸ்.ஜெயா, ‘பேபி’ கல்யாணி, சாந்தா தேவி, டி.எஸ்.துரைராஜ், கொளத்து மணி, மாதவன், ராமையா சாஸ்திரி, குஞ்சிதபாதம் பிள்ளை என பலர் நடித்தனர்.

    சிறுவயது முதல் சிவபெருமானின் தீவிர பக்தையாக இருந்த காரைக்கால் அம்மையார், நமச்சிவாய என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து, தன்னுடைய ஊருக்கு வரும் சிவ பக்தர்களைக் கவனித்துக் கொண்டார். இவரின் இயற்பெயர் புனிதவதி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் இவர், ஒரு பணக்கார வணிகரை மணந்தார். அவர் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம், தனது மனைவி தெய்வீக குணம் கொண்டவர் என்பதைக் கணவருக்கு உணர்த்துகிறது. அவர், மனைவியை ‘அம்மையார்’ என்று அழைக்கத் தொடங்கினார். அவரை, இனி தனது மனைவியாக நடத்த முடியாததால், வேறொரு பெண்ணை மணந்துகொண்டார்.

    இதையடுத்து, எந்த ஆணும் தன்னை ஆசையுடன் தேடாதபடி வேறு வடிவத்தை தனக்குக் கொடுக்கும்படி சிவபெருமானிடம் கேட்டார், காரைக்கால் அம்மையார். அவர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது. காளியின் வடிவமாக மாறிய அவரை, கைலாய மலைக்கு வந்து தன்னைச் சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார் சிவன். கைகளாலேயே அவள் மிகுந்த பக்தியுடன் அங்கு நடந்து சென்றார். இந்தக் கதைதான் படம்.

    இதில் காரைக்கால் அம்மையாராக பி.சரஸ்வதி, அவர் கணவன் பரமதத்தனாக சாரங்கபாணி, சிவபெருமானாக வி.ஏ.செல்லப்பா நடித்தனர். டி.எஸ்.துரைராஜ், எம்.இ.மாதவன், குஞ்சிதபாதம் பிள்ளை ஆகியோர் நகைச்சுவை ஏரியாவை கவனித்துக் கொண்டனர். அப்போது பிரபலமாக இருந்த நடிகை டி.எஸ். ஜெயா, பார்வதியாக நடித்தார். இவர் 1937-ம் ஆண்டு முதல் 1956 வரை, பாலாமணி, மணிமாலை, தமிழறியும் பெருமாள், லைலா மஜ்னு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    அந்த காலகட்டத்தில், பிரபல நடன ஜோடிகளான எஸ்.நடராஜும் ஏ.ஆர்.சகுந்தலாவும் ‘சிவதாண்டவ’ நடனத்தில் பங்கேற்றனர். அந்த நடனம் அப்போது பேசப்பட்டது.

    82 வருடங்களுக்கு முன், 1943-ம் ஆண்டு இதே நாளில் (செப்.22) வெளியான இந்தப் படத்தின் பாடல்கள், நடிப்பு அனைத்தும் நன்றாக இருந்தும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதே கதையை கொண்டு ஏ.பி.நாகராஜன் 1973-ல் வேறொரு படத்தை இயக்கினார். அதில் கே.பி.சுந்தராம்மாள், முத்துராமன், சிவகுமார், வித்யா, மனோரமா, லட்சுமி என பலர் நடித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ரைட் படத்தில் சமூக அக்கறை விஷயம்! – நட்டி தகவல்

    September 22, 2025
    சினிமா

    தாதா சாகேப் விருதை மலையாள சினிமாவுக்கு அர்ப்பணித்தார் மோகன்லால்!

    September 22, 2025
    சினிமா

    படப்பிடிப்பில் ஜீப் கவிழ்ந்தது: ஜோஜு ஜார்ஜ் காயம்

    September 22, 2025
    சினிமா

    நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை: பொதுக்குழுவில் தீர்மானம்

    September 22, 2025
    சினிமா

    “3 நாட்களாக உலகமே தெரியவில்லை” – ரோபோ சங்கர் மகள் உருக்கம்

    September 22, 2025
    சினிமா

     ‘லோகா’ தொடர் வசூல் வேட்டை: ஓடிடி வெளியீடு தாமதம்

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரைட் படத்தில் சமூக அக்கறை விஷயம்! – நட்டி தகவல்
    • சென்னை ஆட்சியர் அலுவலகம் கிண்டிக்கு மாறுகிறது: இடம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
    • உங்கள் கண்கள் தலைவலியை ஏற்படுத்துகின்றனவா: நிவாரணம் கண்டுபிடிப்பதற்கான இணைப்பு, காரணங்கள் மற்றும் வழிகளைப் புரிந்துகொள்வது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ’15 நிமிடங்கள் ஒரு நேரத்தில் ‘: எரிகா உஷா வான்ஸின் ஆறுதலின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்; அவளை ‘விலைமதிப்பற்ற பெண்’ என்று அழைக்கிறார் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அருணாச்சல், திரிபுராவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.