Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»“ஷங்கர் படங்களில் சமூக கருத்துகள் இருக்கும்” – ‘வேள்பாரி’ விழாவில் ரஜினி புகழாரம்!
    சினிமா

    “ஷங்கர் படங்களில் சமூக கருத்துகள் இருக்கும்” – ‘வேள்பாரி’ விழாவில் ரஜினி புகழாரம்!

    adminBy adminJuly 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “ஷங்கர் படங்களில் சமூக கருத்துகள் இருக்கும்” – ‘வேள்பாரி’ விழாவில் ரஜினி புகழாரம்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் ரஜினிகாந்த் பேசியதாவது: “தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர்களில் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோருக்குப் பிறகு ஷங்கர் தான். அவர் படங்களில் வெறும் பிரம்மாண்டம் மட்டும் இருக்காது. சமூக கருத்துகள் இருக்கும், தத்துவம் இருக்கும். ஷங்கருடன் நான் நடித்த படங்கள் மூன்றும் மிகப்பெரிய வெற்றிப் படங்கள். ‘வேள்பாரி’ உரிமை அவரிடம் தான் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது எப்போது படமாக வரும் என்று எல்லாரையும் போலவே நானும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    நம்முடைய அறிவு சொல்லும் நாம் என்ன பேசவேண்டும் என்று. நம் திறமை சொல்லும் எப்படி பேசவேண்டும் என்று. நம் அனுபவம் சொல்லும் எதை பேசவேண்டும், எதை பேசக் கூடாது என்று. கருணாநிதி குறித்து எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கட்சியில் பழைய மாணவர்களை கட்டி மேய்ப்பது கஷ்டம் என்று கூறினேன். அப்படியிருந்தாலும் கட்சிக்கு பழைய மாணவர்கள்தான் தூண்கள். அவர்கள் தான் அடித்தளம். அனுபவம் அதிகம் கொண்டவர்கள் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்.

    இந்த முறை அப்படி எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக சரியாக பேசவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சிவகுமார், கமல்ஹாசன் எல்லாம் அதிகம் படித்தவர்கள். அறிவாளிகள். அவர்களை கூப்பிடாமல் 75 வயதில் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ஸ்லோ மோஷனில் நடந்து வரும் இவரை ஏன் கூப்பிட்டார்கள் என்று நினைத்து விடுவார்கள். அனைவரும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்பத்திக் கொள்ளுங்கள். ஜெயகாந்தன் எனக்கு பிடித்த எழுத்தாளர். ஜாவர் சீதாராமன், சிவசங்கரி, சாண்டில்யன், கல்கி ஆகியோர் நாவல்களை படித்திருக்கிறேன்” இவ்வாறு ரஜினி பேசினார்.

    விழாவில் நாவலாசிரியர் சு. வெங்கடேசன், உதயசந்திரன் ஐஏஎஸ், நடிகை ரோகிணி, தொகுப்பாளர் கோபிநாத், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    “லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன்” – சஞ்சய் தத்

    July 12, 2025
    சினிமா

    பூஜா, சவுபின் அசத்தல்… ‘கூலி’ படத்தின் ‘மோனிகா’ பாடல் வீடியோ எப்படி?

    July 11, 2025
    சினிமா

    “பெய்டு விமர்சனம் செய்பவர்கள் அதிகரித்து விட்டனர்” – இயக்குநர் பிரேம்குமார் ஆதங்கம்

    July 11, 2025
    சினிமா

    கார்த்தி – தமிழ் இணையும் ‘மார்ஷல்’ என்ன ஸ்பெஷல்?

    July 11, 2025
    சினிமா

    சசிகுமாரின் ’ஃப்ரீடம்’ வெளியீடு ஒத்திவைப்பு

    July 11, 2025
    சினிமா

    Superman விமர்சனம்: டிசி ரசிகர்கள் எதிர்பார்த்த ‘கம்பேக்’ கிடைத்ததா?

    July 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மாநிலத்​தின் முதல் பிரஜை​ ஆளுநர்​தான்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து
    • ‘இந்த சேறுகளை கைது செய்யுங்கள்’: பனி வாகனங்களை குறிவைத்த எதிர்ப்பாளர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு டிரம்ப் கோருகிறார்; முழு சக்தியைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளை வழிநடத்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • 2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி: விழுப்புரம் பிரச்சாரத்தில் பழனிசாமி நம்பிக்கை
    • எனது வீட்டில் அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி: பாமக நிறுவனர் ராமதாஸ் அதிர்ச்சி தகவல்
    • “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பழிபோடுவது ஸ்டாலினின் தந்திரம்” – விழுப்புரத்தில் இபிஎஸ் பேச்சு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.