Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 31
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»விரைவில் யூ-டியூபில் வெளியாகிறது ஆமிர்கானின் ‘சித்தாரே ஜமீன் பர்’
    சினிமா

    விரைவில் யூ-டியூபில் வெளியாகிறது ஆமிர்கானின் ‘சித்தாரே ஜமீன் பர்’

    adminBy adminJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விரைவில் யூ-டியூபில் வெளியாகிறது ஆமிர்கானின் ‘சித்தாரே ஜமீன் பர்’
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தை யூ-டியூப்பில் வெளியிடவுள்ளார் ஆமிர்கான். இதனை 100 ரூபாய் கட்டி காணலாம்.

    ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ஆமிர்கான், ஜெனிலியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. தானே தயாரித்து வெளியிட்ட இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்று முன்பே கூறியிருந்தார் ஆமிர்கான். தற்போது இப்படத்தினை யூ-டியூப் தளத்தில் வெளியிடவுள்ளார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மிகக் குறைந்த விலையில், இப்படத்தை பார்க்க முடியும்.

    இந்த புதிய முயற்சி, உலகளாவிய அளவில் திரைப்பட விநியோகத்தில் ஒரு புதிய வழிகாட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தை யூடியூப்-இல் மட்டுமே பார்க்க முடியும், வேறெந்த ஓடிடி தளத்திலும் காண முடியாது. இப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பணம் கட்டி யூ-டியூப் தளத்தில் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.100 விலையிலும், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின் உள்ளிட்ட 38 சர்வதேச நாடுகளில், அவர்கள் நாட்டின் சந்தைக்கேற்ற விலையிலும் காணக் கிடைக்கும்.

    இந்த புதிய முயற்சி குறித்து ஆமிர்கான், “கடந்த 15 ஆண்டுகளாக திரையரங்குகளுக்கு வராத பார்வையாளர்களை அல்லது பல்வேறு காரணங்களுக்காக திரையரங்குகளுக்குள் நுழைய முடியாதவர்களை எவ்வாறு சென்றடைவது என்ற சவாலில் போராடி வருகிறேன். இறுதியாக அதற்கு மிக சரியான நேரம் வந்துவிட்டது. நமது அரசாங்கம் யுபிஐ-ஐ கொண்டு வந்தவுடன், மின்னணு கட்டணங்களில் இந்தியா உலகில் முதலிடத்தைப் பிடித்தது.

    இந்தியாவில் இணைய ஊடுருவல் வியத்தகு முறையில் வளர்ந்து வருகிறது. மேலும் பெரும்பாலான சாதனங்களில் யூ-டியூப் இருப்பதால், இந்தியாவில் பரந்த அளவிலான மக்களையும், உலகின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியையும் நாம் இறுதியாக சென்றடைய முடியும். சினிமா அனைவருக்கும் நியாயமான மற்றும் மலிவு விலையில் சென்றடைய வேண்டும் என்பதே எனது கனவு. மக்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சினிமாவைப் பார்ப்பதற்கான வசதி கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்.

    இந்த யோசனை வெற்றி பெற்றால், புவியியல் மற்றும் பிற தடைகளைத் தாண்டி படைப்பாற்றல் மிக்க குரல்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்ல முடியும். சினிமா துறையில் நுழையும் இளைய படைப்பாளிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும். இதை அனைவருக்குமான வெற்றியாக பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஆமிர்கான்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ‘நீலி’!

    July 31, 2025
    சினிமா

    ‘பான் இந்தியா’ படங்களில் வில்லன் ஆகும் ஹீரோக்கள்!

    July 31, 2025
    சினிமா

    ‘Su From So’: கதை மூலம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் கன்னட திரைப்படம்!

    July 30, 2025
    சினிமா

    ரிஷப் ஷெட்டியின் புதிய படம் அறிவிப்பு!

    July 30, 2025
    சினிமா

    மீண்டும் இணைகிறது ‘தலைவன் தலைவி’ கூட்டணி

    July 30, 2025
    சினிமா

    புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்: முதற்கட்டப் பணிகள் தொடக்கம்

    July 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆன்மா தேடும்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள 10 சக்திவாய்ந்த கேள்விகள்
    • வாட்ச்: ஆஸ்திரேலியாவின் வீட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை அறிமுகப்படுத்துவதற்கான முதல் முயற்சி புகைபிடிக்கப்படுகிறது; லிஃப்ட் -ஆஃப் – டைம்ஸ் ஆஃப் இந்தியா 14 வினாடிகள் கழித்து வருகிறது
    • 1965-ம் ஆண்டு நடந்த போரில் 45, 1971-ல் 71 விமானங்களை இழந்தோம்: மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தகவல்
    • வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ‘நீலி’!
    • உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஆகஸ்ட் மாதத்துக்கான 46 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா தர வேண்டும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.