‘காந்தாரா’ படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. அவர் இயக்கி நடித்த அந்த கன்னடப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் முதல் பாகம் ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற பெயரில் இப்போது உருவாகியுள்ளது.
இதையடுத்து ரிஷப் ஷெட்டி, ஜெய்ஹனுமான் என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தைப் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
18-ம் நூற்றாண்டில் நடிக்கும் கதையை கொண்ட இந்தப் படத்துக்காக அவருக்கு ரூ.55 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு கன்னட ஹீரோ வாங்கும் அதிகபட்ச சம்பளம் இது. ‘காந்தாரா’ படத்தை இயக்கி நடிக்க ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய ரிஷப் ஷெட்டி, ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் என்கிறார்கள்.