இதில் விஜய் தேவரகொண்டா பேசியதாவது: “கீத கோவிந்தம்’ படத்திலிருந்து ராஷ்மிகாவை நான் பார்த்து வருகிறேன், அவர் உண்மையிலேயே ஒரு பூமா தேவி தான் (‘த கேர்ள்ஃபிரண்ட்’ படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திர பெயர்). அன்றிலிருந்து இன்றுவரை, தன் கரியரின் உச்சத்தில் இருக்கும்போது இதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க அவர் முடிவு செய்ததை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
அவர் விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்திருக்கிறார். அவர் இடத்தில் நான் இருந்தால், நான் உடனடியாக எதிர்வினையாற்றி இருப்பேன். ஆனால் ராஷ்மிகா ஒவ்வொரு நாளும் கருணையுடன் நடந்து கொள்கிறார். மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை. ஒரு நாள், உலகம் அவரை உண்மையிலேயே யார் என்று பார்க்கும். அவர் ஒரு அற்புதமான பெண். நான் ‘த கேர்ள்ஃபிரண்ட்’ படத்தைப் பார்த்து, மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். என் கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை.

