Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»ராஜ்கிரணுடன் நடித்த அனுபவம்: சூரி நெகிழ்ச்சி
    சினிமா

    ராஜ்கிரணுடன் நடித்த அனுபவம்: சூரி நெகிழ்ச்சி

    adminBy adminMay 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ராஜ்கிரணுடன் நடித்த அனுபவம்: சூரி நெகிழ்ச்சி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ‘மாமன்’ படத்தில் ராஜ்கிரணுடன் நடித்தது குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாமன்’. இப்படம் தமிழகத்தில் 30 கோடி ரூபாய் வசூலைக் கடந்து பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. குறிப்பாக பி மற்றும் சி சென்டர்களில் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    ‘மாமன்’ படத்தில் ராஜ்கிரண் உடன் நடித்தது குறித்து சூரி, “ராஜ்கிரண் சாரின் நடிப்பு எனக்கு வாழ்க்கைப் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு மகத்தான கற்றல் அனுபவமாகும். ‘மாமன்’ படத்திற்கு அவரைப் போலப் பெரும் வரமாக ஒருவர் இருக்கவே முடியாது. ‘சிங்கம்’ என்ற கதாபாத்திரத்தை அவர் நடித்ததில்லை – அந்த பாத்திரத்தை முழுமையாக உணர்ந்து, ஒவ்வொரு சுவாசத்திலும் அதை வாழ்ந்தார்.

    அவரது ஆழமான உணர்ச்சி வெளிப்பாடுகள், குறிப்பாக விஜி மேடம் அவர்களுடன் பகிர்ந்த அழகான கெமிஸ்ட்ரி, அந்தக் கதையின் நட்பும் நேசமும் பூரணமாகத் திரையிலே பெருகச் செய்தது. இந்திய சினிமாவின் வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ள ராஜ்கிரண் சார்.

    அவருடன் ஒரு காட்சியில் மட்டுமல்ல, ஒரு முழு படத்தையே பகிர்ந்து நடிக்க முடிந்தது என் வாழ்வின் மிகச் சிறந்த ஆசிர்வாதம். தன்னம்பிக்கையும், எளிமையும் நிரம்பிய அந்த மனிதரிடம் இருந்து நேரிலேயே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பது, என் வாழ்க்கையில் என்றும் ஒளிரும் ஒரு பொன்னாளைப்போல் இருக்கும். நன்றியுடன்… நெஞ்சார்ந்த நன்றியோடு… இந்த பயணத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டவனாகவே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார் சூரி.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகள்: பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

    July 7, 2025
    சினிமா

    அனுஷ்கா பட ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு

    July 7, 2025
    சினிமா

    சசிகுமாரின் ‘பிரீடம்’ படத்தில் சிறையில் நடந்த உண்மை சம்பவம்

    July 7, 2025
    சினிமா

    ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக வந்த ‘அடுத்தவாரிசு’!

    July 7, 2025
    சினிமா

    ஜூலை 18-ல் ‘ஜென்ம நட்சத்திரம்’ ரிலீஸ்!

    July 7, 2025
    சினிமா

    மீண்டும் இணையும் ‘மேக்ஸ்’ படக்குழு

    July 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “பாஜகவுடன் அன்று திமுக கூட்டணி வைத்தபோது…” – கோவை பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி
    • தோலுக்கான கோண்ட் கட்டிரா: தோல் வயதானதை தாமதப்படுத்த கோண்ட் கட்டிராவை கொலாஜன் மாற்றாக எவ்வாறு பயன்படுத்துவது
    • “சிறுபான்மையினருக்கு கிட்டுவது அடிப்படை உரிமை; நன்கொடை அல்ல” – ரிஜிஜுவுக்கு ஒவைசி பதிலடி
    • 367 ரன்களில் டிக்ளேர் செய்த முல்டர்: லாராவின் 400 ரன் சாதனையை முறியடிக்காமல் தவிர்ப்பு!
    • ராமதாஸ் தலைமையில் காலையில் கூடும் பாமக செயற்குழுவை புறக்கணிக்க அன்புமணி முடிவு?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.