ரவிக்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக சூரி நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
’மாமன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மதிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூரி. இப்படத்தினை முடித்துவிட்டு அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் சூரி. அவர் கூறிய கதை மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக தேதிகள் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.
‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரவிக்குமார். இதனைத் தொடர்ந்து சூர்யா படத்தினை இயக்குவதாக இருந்தது. ஆனால், அப்படம் கைவிடப்பட்டது. இதனால் மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்குவார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இப்போது சூரி படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ரவிக்குமார்.
சூரி படத்தினை முடித்துவிட்டு, மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் ரவிக்குமார். இப்போது சிவகார்த்திகேயன் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருவதால், சூரி படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் ரவிக்குமார்.