சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படம் ‘பைசன் காளமாடன்’. இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சென்னையில் கபடி போட்டி நடைபெறுவது போன்று அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்த நிலையில் இப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனை முடித்துவிட்டு அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தினை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தீப்பிடித்து எரியும்
வனத்திற்குள்ளிருந்து
தீப்பிழம்பாய் தீபாவளிக்கு வருகிறான்
தெக்கத்தி காளமாடன் (பைசன் )A film for the festive season! A film for Celebrations! Bison is arriving with a Blast! Hitting the screens this October 17th during Diwali!
A film of… pic.twitter.com/uzgGiuu4fm
— Mari Selvaraj (@mari_selvaraj) May 3, 2025