Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 25
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘பொன்னியின் செல்வன்’ பட பாடல் விவகாரம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான தடை உத்தரவு ரத்து!
    சினிமா

    ‘பொன்னியின் செல்வன்’ பட பாடல் விவகாரம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான தடை உத்தரவு ரத்து!

    adminBy adminSeptember 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘பொன்னியின் செல்வன்’ பட பாடல் விவகாரம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான தடை உத்தரவு ரத்து!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.

    அதன் 2-ம் பாகம் படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜ வீரா…’ என்ற பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பாடலுக்கு எதிராக பத்ம விருதுபெற்ற கர்னாடக இசைப் பாடகர் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர், டெல்லி உயர்நீதி மன்றத்தில் காப்புரிமை மீறல் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்தப் பாடல் தனது தாத்தா மற்றும் தந்தை இயற்றிய ‘சிவ ஸ்துதி’ பாடலின் நகல் என்றும் உரிய அனுமதி பெறாமல் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியுள்ளார் என்றும் அதைப் பயன்படுத்தியதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

    வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு நீதிமன்ற பதிவாளரிடம் ரூ.2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அதிலிருந்து ரூ. 2 லட்சத்தைப் பாடகர் ஃபயாஸுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

    இதை எதிர்த்து ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹரி சங்கர், ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு நேற்று வந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில், ‘வீரா ராஜ வீரா’ பாடல் ‘சிவ ஸ்துதி’ பாடலை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று வாதிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, அத்தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் மேல்முறையீடு ஏற்றுக் கொள்ளப்பட்டதால் கொள்கை அடிப்படையிலேயே இத்தடை பிறப்பிக்கப் பட்டிருப்பதாகவும், பாடல்கள் குறித்து இன்னும் ஆராயவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    டிச.25-ல் வெளியாகிறது ‘அனகோண்டா’!

    September 25, 2025
    சினிமா

    ஸ்வேதா மேனன் மீதான வழக்கில் தடை நீடிப்பு!

    September 25, 2025
    சினிமா

    இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு ‘குறள் இசையோன்’ பட்டம்!

    September 25, 2025
    சினிமா

    நெட்பிளிக்ஸ் வெப் தொடரில் பிரியங்கா மோகன்!

    September 25, 2025
    சினிமா

    “நெகட்டிவ் விமர்சகர்களால் பேராபத்து” – ‘மெய்யழகன்’ அனுபவம் பகிரும் இயக்குநர் பிரேம் குமார்

    September 24, 2025
    சினிமா

    ‘ஓஜி’ ரிலீஸுக்காக திரைகளை விட்டுத் தந்த ‘மிராய்’ படக்குழு!

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டிச.25-ல் வெளியாகிறது ‘அனகோண்டா’!
    • குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனங்களை தடுக்க குழு: ஐகோர்ட் உத்தரவு
    • 3 மாதங்களில் யூரிக் அமில அளவை குறைக்க உதவும் 3 பயிற்சிகள்
    • இந்து மக்கள் தொகை: ஆதித்யநாத் கருத்து
    • கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: ஆயுஷ் ஷெட்டி, கிரண் ஜார்ஜ் தோல்வி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.