‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸுக்கு நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைக்கு தாயானதைத் தொடர்ந்து நடிப்பில் இருந்து விலகி இருந்தார் தீபிகா படுகோன். தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ‘கிங்’ படத்தில் ஷாரூக்கானுக்கு நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் தீபிகா படுகோன். அதனைத் தொடர்ந்து பிரபாஸுக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படம் ‘ஸ்பிரிட்’. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். இதில் பிரபாஸுக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் தீபிகா படுகோன். இந்தக் கூட்டணி இதற்கு முன்பாக ‘கல்கி’ படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்.
2024-ம் ஆண்டு ‘ஸ்பிரிட்’ படம் தொடங்க இருந்தபோது, முதலில் தீபிகாவிடம் தான் பேசினார்கள். அச்சமயத்தில் குழந்தைக்கு தாயாக இருந்ததால் நடிக்க முடியாது எனக் கூறிவிட்டார். ஆனால் படப்பிடிப்பு தள்ளிப்போய் விட்டதால் இப்போது மீண்டும் தீபிகாவிடமே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.