பழம்பெரும் இந்தி நடிகையும் பிரபல இயக்குநர் சாந்தா ராமின் மனைவியுமான சந்தியா (வயது 94) மும்பையில் காலமானார். பிரபல இந்தி இயக்குநர் சாந் தாராமின் அமர் பூபாலி (1951) என்ற மராத்திப் படம் மூலம் அறிமுகமானவர் சந்தியா. தொடர்ந்து சாந்தாராம் இயக் கிய இந்தி மற்றும் மராத்தி படங் களில் நடித்து வந்தார்.
இயக்கு நர் சாந்தாராமைத் திருமணம் செய்துகொண்ட இவர், தனது நடிப்பு மற்றும் நடனத் திறமை கு களால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தார். ‘ஜனக் ஜனக் பாயல் பஜே’ திரைப்படம் மிகச் சிறந்த புகழை அவருக்குப் பெற்று தந்தது. ‘தீன் பத்தி சார் ரஸ்தா’, ‘ஜனக் ஜனக் பாயல் பாஜே, ‘தோ ஆங்கேன் பாரா ஹாத்’, ‘பிஞ்ச்ரா’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
வயது முதிர்வு காரணமாக அவதிப் பட்டு வந்த அவர், நேற்று கால மானார். அவர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை உலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.