Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»பரிசுப் போட்டி அறிவித்து வெளியான ‘உலகம்’!
    சினிமா

    பரிசுப் போட்டி அறிவித்து வெளியான ‘உலகம்’!

    adminBy adminJuly 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பரிசுப் போட்டி அறிவித்து வெளியான ‘உலகம்’!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தமிழில் சினிமா தொடங்கிய காலகட்டங்களில் இலங்கை தயாரிப்பாளர்கள் பலர் சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்கள் திரைப்படங்களைத் தயாரித்தனர். முதல் சிங்களப் படமான ‘கடவுனு பொருண்டுவா’ தென்னிந்தியாவில்தான் தயாரிக்கப்பட்டது.

    இலங்கை திரைப்படத்துறையின் முன்னோடியான எஸ்.எம்.நாயகம் அதைத் தயாரித்தார். அவர் சித்ரகலா மூவிடோன் என்ற சினிமா ஸ்டூடியோவை மதுரையில் நிறுவி படங்களைத் தயாரித்து வந்தார். அவரைப் போலவே இலங்கையைச் சேர்ந்த எம்.ஹெச்.எம்.மூனாஸ் சில வருடங்கள் சென்னையில் வசித்து வந்தார். அவர் தயாரிப்பில் உருவான படம், உலகம். வசனம், பாடல்களை அவரே எழுதினார். 1950-க்கு முன் நடித்துக் கொண்டிருந்த பெரும்பாலான நடிகர்கள் இதில் நடித்தனர்.

    வி.நாகையா, எம்.வி.ராஜம்மா ஜோடியாக நடித்தனர். வரதன், பி.கே.சரஸ்வதி, பி.எஸ்.வீரப்பா, டி.கே.பகவதி, எம்.எஸ்.திரவுபதி, டி.ஆர்.ரஜனி, எஸ்.எம்.குமரேசன், ‘புளிமூட்டை’ ராமசாமி, எம்.ஆர்.சாமிநாதன், டி.ஆர்.சுவாமிநாதன், குஞ்சிதபாதம், வி.டி.கல்யாணம், டி.வி.சேதுராமன், ‘அப்பா’ கே.துரைசாமி, எம். லட்சுமி பிரபா, சி.கே.சரஸ்வதி, கே.எஸ். அங்கமுத்து, கே.அரங்கநாயகி, என்.ஆர்.சகுந்தலா, ஜி.சரோஜா, ‘பேபி’ லட்சுமி குமாரி, நடனக் கலைஞர்களான லலிதா-பத்மினி என பெரும் நட்சத்திரக் கூட்டமே இதில் நடித்தது.

    அந்தக் காலகட்டத்தில் பிரபல படத்தொகுப்பாளராக இருந்த எல்.எஸ்.ராமச் சந்திரன் இயக்கினார். ஆர்.ஆர்.சந்திரன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு எம்.எஸ்.ஞானமணி இசை அமைத்தார். கவிகுஞ்சரம், கே.பி. காமாட்சி, பி. அனுமந்தராவ், குயிலன், தமிழ் ஒளி பாடல்களை எழுதினர். ‘தெக்கத்திக் கள்ளனடா’, ‘இந்த தள்ளாடும் கிழத்தாடி தாத்தாவுக்கும்’, ‘காதலினால் உலகமே’, ‘கலையே உயிர் துணையே’ உள்பட பல பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.

    ஒரு ஏழைக் குடும்பம் செல்வச் செழிப்பாக மாறுவதுதான் கதை. அந்த ஏழை தம்பதிக்கு 2 மகன்கள். அவர்களின் திருமணத்துக்குப் பிறகு சிக்கல்கள் ஏற்பட்டு எப்படி சுபம் ஆகிறது என்று கதை செல்லும்.

    சென்னையில் அப்போது பிரபலமாக இருந்த பல்வேறு வகையான நடனங்கள் மற்றும் மல்யுத்தப் போட்டிகள் இதில் இடம்பெற்றன. தமிழ், தெலுங்கில் உருவாக்கப்பட்ட இதன் ரிலீஸுக்கு பிறகு வித்தியாசமான விளம்பரத்தைப் படக்குழுவினர் செய்தனர். படத்தின் டிக்கெட்டோடு, உங்களின் மனதைத் தொட்ட கதாபாத்திரத்தின் பெயர், அதிகபட்ச அனுதாபத்தைத் தூண்டிய கேரக்டர், பிடித்த பாடல் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பினால், அவர்களுக்குப் பரிசு என்று அறிவித்திருந்தார்கள்.

    முதல் பரிசு ரூ.25 ஆயிரம். அந்த காலகட்டத்தில் இந்த தொகை பெரிது. ஒரு படத்துக்கு முதன் முதலாகப் பரிசு என்று அறிவிக்கப்பட்டது தமிழில் இதற்குத்தான் என்கிறார்கள். 1953-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம், ஏகப்பட்ட நடிகர்கள், பிரம்மாண்டம், பரிசு என இருந்தாலும் இரண்டு மொழியிலும் வெற்றிப் பெறவில்லை

    என்பது சோகம்!



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘போர்த் தொழில்’ இயக்குநரிடம் தனுஷ் சரண்டர்!

    July 10, 2025
    சினிமா

    தமிழுக்கு ‘ஹவுஸ்மேட்ஸ்’ புதிதாக இருக்கும்! – இயக்குநர் நம்பிக்கை

    July 10, 2025
    சினிமா

    சினிமா கணிக்க முடியாத விளையாட்டு: ராம்

    July 10, 2025
    சினிமா

    ‘ஜென்ம நட்சத்திரம் படத்தில் வித்தியாசமான கிளைமாக்ஸ்’

    July 10, 2025
    சினிமா

    ரீரிலீஸ் ஆகிறது தனுஷின் ‘அம்பிகாபதி’!

    July 10, 2025
    சினிமா

    “அதன்பின் பிரபு சாலமனிடம் பேசவில்லை” – வேதனை பகிர்ந்த விஷ்ணு விஷால்

    July 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உக்ரைனியர்களை ரஷ்யாவாலும், பாலஸ்தீனர்களை இஸ்ரேலாலும் அழித்துவிட முடியாது: ப.சிதம்பரம்
    • தவெக கொடி வண்ணம் பூசிய நாட்டுப் படகுகளுக்கு மானியம் நிறுத்தம்: நெல்லை மீனவர்கள் அதிர்ச்சி
    • நீல ஒளி கண்ணாடிகள் வேலை செய்யுமா? டிஜிட்டல் கண் திரிபு மற்றும் திரை நேரம் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கர்நாடக முதல்வர் பதவி காலியாக இல்லை: சித்தராமையா
    • காரைக்காலில் மாங்கனித் திருவிழா கோலாகலம்: மாங்கனிகளை வீசி வழிபட்ட பக்தர்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.