Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்க மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி
    சினிமா

    நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்க மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி

    adminBy adminAugust 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்க மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: படத்தில் நடிக்க முன்பணமாக பெற்ற ரூ. 6 கோடியை திருப்பி செலுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கும் வகையில் மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    இது தொடர்பாக பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க திட்டமிடப்பட்ட 2 படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்தாண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் படத்துக்கு ரூ. 15 கோடி ஊதியமாக பேசப்பட்டு, ரூ. 6 கோடி முன்பணமாக வழங்கப்பட்டது.

    ஒப்பந்தப்படி தங்களது நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவன படங்களில் அவர் நடித்ததால் கொடுத்த முன்பணத்தை திருப்பிக் கேட்டோம். இதுவரையிலும் அவர் எங்களிடம் வாங்கிய ரூ.6 கோடியை திருப்பித்தரவில்லை. ஆனால் தற்போது ரவி மோகன் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் மூலமாக புதிதாக படம் ஒன்றை தயாரித்து வருகிறார். எனவே, எங்களிடம் வாங்கிய ரூ.6 கோடியை வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

    இந்த மனு கடந்த முறை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியனும், நடிகர் ரவி மோகன் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலனும் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரூ.6 கோடிக்கான சொத்து உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, “உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி நடிகர் ரவி மோகன், சொத்து உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவி்ல்லை. எனவே எங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.6 கோடி பாக்கிக்காக அவரது சொத்துகளை முடக்கும் வகையில் மனு தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும்” எனக் கோரினார். அதையேற்ற நீதிபதி, இதுதொடர்பாக மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    “சிறுவயதில் இட்லி சாப்பிட காசு இருக்காது” – ‘இட்லி கடை’ பட விழாவில் தனுஷ் உருக்கம்!

    September 15, 2025
    சினிமா

    “இமாலய சாதனையும் எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதர்” – இளையராஜாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்!

    September 14, 2025
    சினிமா

    பிரபு சாலமனின் ‘கும்கி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    September 14, 2025
    சினிமா

    ”மகிழ்ச்சி காரணமாக அதிகம் பேச இயலவில்லை” – பாராட்டு விழா குறித்து இளையராஜா நெகிழ்ச்சி

    September 14, 2025
    சினிமா

    சமூக ஊடகங்களில் இருந்து விலகினார் ஐஸ்வர்யா லட்சுமி!

    September 14, 2025
    சினிமா

    100 பிரபலங்கள் வெளியிட்ட ‘அடியே வெள்ளழகி’ பாடல்!

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சீருடை பணியாளர்கள் 193 பேருக்கு அண்ணா பதக்கம்
    • பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் இன்று தொடக்கம்
    • தமிழகத்தில் நாளை முதல் செப்.19 வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
    • முதுநிலை மேலாண்மை படிப்புக்கான ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.20 வரை அவகாசம் நீட்டிப்பு
    • இடைக்கால அரசின் பரிந்துரையை ஏற்று நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: 2026 மார்ச்சில் பொதுத் தேர்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.