Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, January 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கால நீட்டிப்பை எதிர்த்த வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    சினிமா

    தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கால நீட்டிப்பை எதிர்த்த வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கால நீட்டிப்பை எதிர்த்த வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் அதன் நிர்வாகிகள் ஜூன் 4-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தென்னிந்திய நடிகர் சங்க சட்ட திட்டத்தின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி, நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை செல்லாது என்றும் சட்ட விரோதமானது என்றும் அறிவிக்க கோரி நம்பிராஜன் என்ற உறுப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், “கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழில், நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது குறித்த எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. நடிகர் சங்க கட்டிட பணிகளை சுட்டிக்காட்டி பதவி காலத்தை நீட்டிக்க முடியாது. புதிய நிர்வாகிகள் கட்டுமான பணிகளை தொடர்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, பதவி காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்திற்கும் விரோதமானது.

    நிர்வாகிகளின் பதவி காலத்தை நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். தேர்தல் நடத்தும் வரை தற்போதைய நிர்வாக குழு மற்றும் செயற்குழு உள்ளிட்ட நிர்வாகிகள் எந்த முடிவும் எடுக்க தடை விதிக்க வேண்டும்,” என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி கே. குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தென்னிந்திய நடிகர் சங்கம், அதன் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் ஜூன் 4-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    கார்த்திக் சுப்பராஜின் புதிய படம் தொடக்கம்

    December 3, 2025
    சினிமா

    குரலற்றவர்களின் குரலே ‘மாஸ்க்’: இயக்குநர் வெற்றிமாறன்

    December 3, 2025
    சினிமா

    நவ.14-ல் ஓடிடியில் ‘டியூட்’ ரிலீஸ்

    December 3, 2025
    சினிமா

    நவ.24 முதல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்

    December 3, 2025
    சினிமா

    அனுராக் கஷ்யாப் – சாம் ஆண்டன் இணையும் ‘அன்கில்_123’

    December 3, 2025
    சினிமா

    ஷேடோ ஆஃப் த தின் மேன் – 1941: கவனக் குறைவால் சிக்கும் கொலையாளி – ஹாலிவுட் மேட்னி 5

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலை எப்படி அடைவது மற்றும் ஏன் இந்த கடற்கரை ஜோதிர்லிங்கத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஸ்கிரிப்டை புரட்டுதல்: புதிய ஆய்வு, பெண்களை விட ஆண்கள் ‘காதல்’ அதிகம், உணர்ச்சிப் பாதுகாப்புக்காக ஏங்குகிறார்கள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘துல்ஹன் கி பெஹன்’ – தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கான புதிய ஆடைக் குறியீட்டை கிருதி சனோன் அமைத்துள்ளார்
    • இந்த செடி பாம்புகளை கவரும்! உங்கள் தோட்டத்தில் நடுவதை தவிர்க்கவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சீனப் பெண் விபத்தில் ஒரு மூட்டு மற்றும் கையை இழந்து 3 மாரடைப்புகளில் இருந்து உயிர் பிழைத்தார்; தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இப்போது சிறப்புத் திறனாளிகளை வேலைக்கு அமர்த்தும் வணிகத்தை நடத்துகிறது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.