துல்கர் சல்மான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘காந்தா’, ‘ஐ யம் கேம்’ உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் துல்கர் சல்மான். இப்படங்களைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் படப் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க, பான் இந்தியா படமாக உருவாகிறது. இதன் வழக்கமான படப்பிடிப்பு படப்பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடி இயக்கும் இப்படம் துல்கர் சல்மான் நடிக்கும் 41-வது படமாகும். சமகால காதல் கதையாக சுவாரஸ்ய திரைக்கதையுடன் இப்படம் தயாராகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் பூஜையில் நானி, இயக்குநர் புச்சிபாபு சனா, ஸ்ரீகாந்த் ஓடிலா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதன் ஒளிப்பதிவாளராக அனய் ஓம்.கோஸ்வாமி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது. இதில் துல்கர் சல்மான் உடன் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.