Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, January 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘திருநீலகண்டர்’ – சிவபெருமானின் திருவோடு திருவிளையாடல்!
    சினிமா

    ‘திருநீலகண்டர்’ – சிவபெருமானின் திருவோடு திருவிளையாடல்!

    adminBy adminJune 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘திருநீலகண்டர்’ – சிவபெருமானின் திருவோடு திருவிளையாடல்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தமிழ் சினிமாவில் சமூக திரைப்படங்கள் ஒரு பக்கம் வெளி வந்து கொண்டிருந்தாலும் 1960 மற்றும் 1970-களில் ஏராளமான புராண மற்றும் பக்தி படங்களும் வெளியாகின. இயக்குநர் ஏ.பி.நாகராஜன், தொடர்ந்து இதுபோன்ற படங்களில் அதிக ஆர்வம் காட்டினார்.

    திருவிளையாடல், திருமால் பெருமை, சரஸ்வதி சபதம், அருட்பெருஞ்சோதி, அகத்தியர் என பல திரைப்படங்கள் உருவாகின. அதில் ஒன்று, ‘திருநீலகண்டர்’. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்டரின் கதையை சொன்ன படம் அது.

    சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர் திருநீலகண்டர். மனைவியுடன் வாழ்ந்து வந்த அவர், ஒரு கட்டத்தில் சிற்றின்ப மோகம் காரணமாகத் தவறான பாதைக்குச் செல்கிறார். இதை அறிந்த அவருடைய மனைவி கணவரிடம் கோபம் கொண்டு, இனி தன்னைத் தொடக்கூடாது என்று கூறிவிடுகிறார். தனது தவறை உணர்ந்த நீலகண்டர், மற்ற பெண்களை மனதாலும் நினைக்க மாட்டேன் என்று சிவபெருமான் மீது ஆணையிட்டு, முனிவரைப் போல வாழ்கிறார்.

    வருடங்கள் ஓடியதும் இருவரும் முதுமை அடைந்தனர். சிவபெருமான், நீலகண்டரின் பெருமையையும் திறத்தையும் உலகுக்கு உணர்த்த நினைக்கிறார். அதற்காக தமது கோலத்தை மாற்றி, திருவிளையாடலைத் தொடங்கினார்.

    திருவோடு தூக்கி நீலகண்டரின் சிறுவீட்டை அடைகிறார். நீலகண்டரும் அவர் மனைவியும் அவரை வரவேற்று முறைப்படி வழிபட்டனர். பின் தன் கையிலிருந்த திருவோட்டைக் காண்பித்து, ‘அபார சக்தி வாய்ந்த இத் திருவோட்டை உன்னிடம் ஒப்படைக்கிறேன். திரும்பி வந்து கேட்கும்போது தரவேண்டும்’ என்கிறார். அதை வாங்கி பத்திரமாக வைக்கிறார் நீலகண்டர். சில காலத்துக்குப் பின் அவர் வந்து கேட்கும்போது, அதைக் காணவில்லை.

    கோபமாகிறார், சிவனடியார். ஆசையால், திருவோட்டை திருடிவிட்டாய் என்கிறார். மறுக்கிறார் அவர். அப்படியென்றால் உன் மனைவியின் கையைப் பற்றி பொற்றாமரை குளத்தில் மூழ்கி உண்மையை நிலை நாட்டு என்கிறார். மனைவிக்கும் தமக்குமான பிரச்சினையை சொல்ல முடியாத நிலையில், அது முடியாது என்கிறார். பிறகு, வழக்கு மன்றத்துக்கு இழுத்துச் செல்கிறார் சிவனடியார். அங்கும் அதே தீர்ப்புக் கூறப்படுகிறது. வேறு வழியில்லாமல் ஒரு கழியில் ஒரு பக்கத்தை அவரும் மறு பக்கத்தை அவர் மனைவியும் பிடித்துக்கொண்டு குளத்தில் முங்குகிறார்கள். இறைவன் அருளால் அவர்கள் முதுமை நீங்கி இளமையுடன் வருவது கதை.

    இந்தக் கதையை கண்ணதாசனும், பஞ்சு அருணாசலமும் திரைக்கதை ஆக்கினார்கள். சி.பி.ஜம்புலிங்கம் என்ற ஜம்பு இயக்கினார். திருநீலகண்டராக டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். அவர் மனைவி நீலாவதியாக சவுகார் ஜானகியும், கலாவதியாக எம்.பானுமதியும் நடித்தனர். சிவபெருமானாகவும், நீலகண்டரிடம் திருவோடு தரும் சிவனடியாராகவும் ஆர்.எஸ்.மனோகர், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். காந்திமதி, சுருளிராஜன், புஷ்பமாலா, உசிலமணி, எஸ்.டி.சுப்புலட்சுமி என பலர் நடித்தனர். சி.என்.பாண்டுரங்கன் இசை அமைத்தார். கண்ணதாசனும் பஞ்சு அருணாச்சலமும் பாடல்களை எழுதினர். 1972-ம் ஆண்டு ஜுன் 3-ம் தேதி வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    கார்த்திக் சுப்பராஜின் புதிய படம் தொடக்கம்

    December 3, 2025
    சினிமா

    குரலற்றவர்களின் குரலே ‘மாஸ்க்’: இயக்குநர் வெற்றிமாறன்

    December 3, 2025
    சினிமா

    நவ.14-ல் ஓடிடியில் ‘டியூட்’ ரிலீஸ்

    December 3, 2025
    சினிமா

    நவ.24 முதல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்

    December 3, 2025
    சினிமா

    அனுராக் கஷ்யாப் – சாம் ஆண்டன் இணையும் ‘அன்கில்_123’

    December 3, 2025
    சினிமா

    ஷேடோ ஆஃப் த தின் மேன் – 1941: கவனக் குறைவால் சிக்கும் கொலையாளி – ஹாலிவுட் மேட்னி 5

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தண்ணீர் பாட்டில்களை சுத்தம் செய்ய இது மிகவும் பயனுள்ள முறையாகும்; இல்லை அது சோப்பு நீர் அல்ல! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த அரிய இமயமலைப் பூ நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாகக் கூறப்படுகிறது – புனிதமான பிரம்ம கமலத்தை வீட்டில் வளர்க்கலாமா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சேலை-குறியிடப்பட்ட ஆடையா? டெய்னா டெய்லரின் கோல்டன் குளோப்ஸ் தோற்றம் தேசி ஃபேஷன் விவாதத்தைத் தூண்டுகிறது – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ISRO’s PSLV-C62 mission: Anvesha உளவு செயற்கைக்கோள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய உண்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சஞ்சீவ் கபூர் காதல் கதை: பிரபல சமையல்காரர் சஞ்சீவ் கபூர் தனது மனைவி அலியோனா கபூரை ரயில் பயணத்தில் சந்தித்தது எப்படி: அவர்களின் காதல் கதை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.