Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»“தியேட்டரில் முதல் 3 நாள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்காதீர்” – விஷால் வலியுறுத்தல்
    சினிமா

    “தியேட்டரில் முதல் 3 நாள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்காதீர்” – விஷால் வலியுறுத்தல்

    adminBy adminJuly 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “தியேட்டரில் முதல் 3 நாள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்காதீர்” – விஷால் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களுக்கு திரையரங்குக்குள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்களுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட் ஃப்ளவர்’. ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர் விஷால், இயக்குநர்கள் பி.வாசு, சுராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.

    இந்த விழாவில் விஷால் பேசும்போது, “பி.வாசு சார் அன்றிலிருந்து இப்போது வரை நிற்கிறார் என்றால் அவரின் படங்கள் மற்றும் அவரின் உழைப்புதான் காரணம். இப்போதெல்லாம் நிறைய பேருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். ஆனால், சுராஜ் அவர்களுக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் தர வேண்டும். அவர் இயக்கிய படங்கள் பல பேருக்கு மெடிடேஷன். அவர் வடிவேலுவை வைத்து இயக்கிய நகைச்சுவை காட்சிகள் தான் இன்றும் பலருக்கும் மருந்தாக இருக்கிறது.

    இந்த அரங்கம் நிறைந்து இருப்பது போல அரங்கம் நிறைந்த காட்சிகளாக இப்படம் ஓட வேண்டும். இங்கு சின்ன படம், பெரிய படம் என்று எதுவும் இல்லை. இந்த படத்தின் விழாவுக்கு வருவது என் கடமை. என் நண்பன் போராளி விக்னேஷுக்காக வந்திருக்கிறேன். அதற்கு காரணம் அவர் பல்வேறு கஷ்டங்கள், அவமானங்களை தாண்டி இங்கு வந்திருக்கிறார். அவர் வெற்றி பெற வேண்டும். மாணிக்கம் என்ற ஒரு பொக்கிஷம் உங்களுக்கு தயாரிப்பாளராக கிடைத்திருக்கிறார்.

    2025-ல் என்ன நடக்கிறது என்பதை படமாக எடுக்கவே இன்று பல இயக்குநர்கள் திண்டாடுகிறார்கள். ஆனால், இயக்குனர் ஆண்ட்ரூ 2047-ல் என்ன நடக்கும் என்பதை திரைக்கதையாக்கி படமாக எடுத்துள்ளார். எனக்குப் பிடித்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங், நேதாஜி. அதில் நேதாஜிக்கு இந்த படத்தில் Tribute செய்தது மகிழ்ச்சி.

    திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை. ஒரு திரைப்படம் வெளியாகும்போது முதல் 3 நாட்களுக்கு மட்டும் திரையரங்க உரிமையாளர்கள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம். வெளியில் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு முக்கியமான கோரிக்கை. தமிழ் சினிமாவில் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாகிறது. எந்த படத்துக்கும் சரியான அளவில் திரையரங்குகள் கிடைப்பதில்லை. அதனால் படங்கள் வெளியீட்டை ஒழுங்குப்படுத்த வேண்டும்.

    விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க வேலைகள் நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 29 என் பிறந்த நாள். கண்டிப்பாக நல்ல செய்தி காத்திருக்கிறது. திருமண தேதியை விரைவில் அறிவிப்பேன்” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    நானியுடன் இணையும் மோகன்பாபு!

    July 17, 2025
    சினிமா

    ‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’ உருவாகுமா? – இயக்குநர் கபீர் கான் பதில்

    July 17, 2025
    சினிமா

    மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் இசை ஆல்பம்!

    July 17, 2025
    சினிமா

    சினிமாவாகிறது இந்தியாவின் முதல் ஹாலிவுட் நடிகர் சாபு தஸ்தகீர் வாழ்க்கை கதை!

    July 17, 2025
    சினிமா

    இயக்குநர் ஆனார் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல்!

    July 17, 2025
    சினிமா

    சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை: இயக்குநர் வி.சேகர் ஆதங்கம்

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இமாச்சலில் சாலையின் நடுவில் அச்சுறுத்தும் மின் கம்பங்கள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
    • வங்கதேசத்தில் ஹசீனா ஆதரவாளர்கள் – போலீஸார் இடையே மோதல்: 4 பேர் உயிரிழப்பு
    • ‘ரூ.3 லட்சம் பேரம்; ரூ.50 லட்சத்துக்கு விற்பனை’ – நாமக்கல் ‘கிட்னி’ கொள்ளையில் நடவடிக்கை கோரும் அன்புமணி
    • பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை: எடை இழப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண் கடந்து செல்கிறார்: என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள், ஏன் செயல்முறை ஆபத்தானது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தேர்தல் ஆணையம் பாஜகவின் ‘தேர்தல் திருட்டு’ கிளையாக மாறிவிட்டது – ராகுல் குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.