‘ஜனநாயகன்’ இயக்குநர் ஹெச்.வினோத் தயாரிப்பாளராக அறிமுகமாக இருக்கிறார்.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் ஹெச்.வினோத். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே புதிய படமொன்றை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஹெச்.வினோத்.
‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரம்மா, அடுத்து இயக்கவுள்ள படத்தினை ஹெச்.வினோத் தயாரிக்க இருக்கிறார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. சின்ன பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தினை ஒரே கட்டமாக முடித்து வெளியிட முடிவு செய்திருக்கிறார் ஹெச்.வினோத்.
பிரம்மா படத்தைத் தொடர்ந்து, அடுத்து படங்கள் தொடர்ச்சியாக தயாரிப்பாரா என்பது விரைவில் தெரியவரும். அக்டோபரில் படப்பிடிப்பை தொடங்கி, ஒரே கட்டமாக இந்தாண்டிற்குள் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பணிபுரிந்து வருகிறது படக்குழு.