Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, January 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘டூரிஸ்ட் பேமிலி’ படம் குறித்து ஆட்டோ ஓட்டுநரின் சிலிர்க்கும் அனுபவம்: இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் பகிர்வு
    சினிமா

    ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் குறித்து ஆட்டோ ஓட்டுநரின் சிலிர்க்கும் அனுபவம்: இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் பகிர்வு

    adminBy adminJune 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் குறித்து ஆட்டோ ஓட்டுநரின் சிலிர்க்கும் அனுபவம்: இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் பகிர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தியளவில் உள்ள பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார்கள். உலகளவில் ரூ.85 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது. இப்படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே நல்ல லாபத்தைக் கொடுத்தது.

    ’டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் தான் ஆட்டோவில் பயணித்த போது நடந்த அனுபவம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பதிவில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்.

    அப்பதிவில், “நான் மாஸ்க் அணிந்துக் கொண்டு ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது ஆட்டோர் ஒட்டுநர் திடீரென்று யூடியூப்பில் ‘முகை மழை’ பாடலைப் போட்டுவிட்டார். உடனே என் முகம் பிரகாசித்தது. அவருக்கு அப்படம் பிடித்திருந்ததா என்று கேட்டேன். எவ்வித தயக்கமும் இல்லாமல் “நான் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தினை திரையரங்கில் 3 முறை பார்த்தேன்” என்று கூறினார்.

    மேலும் அவரது கைகளைக்காட்டி “என் கைகளைப் பாருங்கள். இப்படத்தைப் பற்றி பேசுவதே எனக்கு மெய்சிலிர்க்கிறது. அந்தளவுக்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என்றார். பின்னர் அவர் சசிகுமார் சாரின் கதாபாத்திரத்துடன் எவ்வளவு ஆழமாக இணைந்திருக்கிறார் என்பதைப் பற்றி பேசத் தொடங்கினார்.

    குடும்பத்தின் எதிர்காலத்திற்காக கடுமையாக போராடிய தனது தந்தையுடன் சசிகுமார் சாரை ஒப்பிட்டார். அவரது தந்தை இப்போது இல்லை, படத்தைப் பார்த்ததும் வலுவான நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததாக கூறினார். அவர் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் உடைந்து போனார்.

    நான் தான் அப்படத்தின் இயக்குநர் என்று அவரிடம் சொன்னவுடன் மகிழ்ச்சியில் திளைத்துவிட்டார். ‘டூரிஸ்ட் பேமிலி’ மீதான தனது அன்பை முழுமனதுடன் வெளிப்படுத்தினார். என்ன ஒரு தருணம். உங்கள் சிறிய பங்களிப்பால் ஒருவர் சிரிக்கிறார், குணமடைகிறார் அல்லது ஆழமாக உணர்கிறார் என்பதை நீங்கள் உணரும் போது வரும் மகிழ்ச்சி உண்மையில் அளவிட முடியாதது” என்று தெரிவித்துள்ளார் அபிஷன்.

    அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், பக்ஸ் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிப்பில் உருவானது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    கார்த்திக் சுப்பராஜின் புதிய படம் தொடக்கம்

    December 3, 2025
    சினிமா

    குரலற்றவர்களின் குரலே ‘மாஸ்க்’: இயக்குநர் வெற்றிமாறன்

    December 3, 2025
    சினிமா

    நவ.14-ல் ஓடிடியில் ‘டியூட்’ ரிலீஸ்

    December 3, 2025
    சினிமா

    நவ.24 முதல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்

    December 3, 2025
    சினிமா

    அனுராக் கஷ்யாப் – சாம் ஆண்டன் இணையும் ‘அன்கில்_123’

    December 3, 2025
    சினிமா

    ஷேடோ ஆஃப் த தின் மேன் – 1941: கவனக் குறைவால் சிக்கும் கொலையாளி – ஹாலிவுட் மேட்னி 5

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ட்ரம்ப் துஷ்பிரயோகம் செய்தார் மற்றும் ‘பெடோஃபைல் ப்ரொடெக்டர்’ என்று கத்திய ஃபோர்டு தொழிலாளிக்கு நடுவிரலைக் காட்டுகிறார் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வாழ்க்கையில் மன்னிப்பு கேட்கக் கூடாத 5 விஷயங்கள்
    • 6,000 ஆண்டுகள் பழமையான வாக்கி-டாக்கி: தொலைதூர தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படும் வரலாற்றுக்கு முந்தைய குண்டுகளை விஞ்ஞானிகள் புதுப்பிக்கின்றனர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘நான் இருட்டில் தனியாக இருக்கிறேன்’: டிரம்பின் வியத்தகு நிதி திரட்டும் மின்னஞ்சல் ஆன்லைன் விமர்சனத்தைத் தூண்டுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இரண்டு வாலிபர்களுக்கு மரணதண்டனை: இரட்டை கொலைகாரனுக்கு வரி செலுத்துவோருக்கு £7,500 வழங்கப்பட்டது. ஆறு இலக்க சட்ட மசோதா | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.