‘புஷ்பா 2’ திரைப்படம் தொலைக்காட்சி ஒளிபரப்பில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. இது பாலிவுட் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அனைத்து தளங்களிலும் ‘புஷ்பா 2’ திரைப்படம் சாதனையை நிகழ்த்தியது. தற்போது இந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பில் 5.1 டி.ஆர்.பி என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூல ம் 5.4 கோடி பேர் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இப்படத்தினை கண்டுகளித்துள்ளனர். இந்த எண்ணிக்கையைப் பார்த்து பாலிவுட் திரையுலகினர் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.
ஏனென்றால் ஷாரூக்கான் நடித்த ‘பதான்’, ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ உள்ளிட்ட பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள் கூட இந்த டி.ஆர்.பியை எட்டவில்லை. ‘புஷ்பா 2’ திரைப்படம் அந்தளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கூட 3.9 டி.ஆர்.பி தான் பெற்றிருக்கிறது. அதனை ‘புஷ்பா 2’ முறியடித்திருப்பதன் மூலம் எந்தளவுக்கு வட இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது.