ஃபஹத் ஃபாசில் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மற்றும் ‘குருவாயூர் அம்பலநடையில்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் விபின் தாஸ். இந்த இரண்டுமே மாபெரும் வரவேற்பை பெற்றவை. இப்படங்களைத் தொடர்ந்து விபின் தாஸின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
சில தினங்களுக்கு முன்பு ஃபஹத் ஃபாசில் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் படத்தினை விபின் தாஸ் இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. இதனை எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டியிலும் உறுதிப்படுத்தினார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. தற்போது இப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விபின் தாஸ் அடுத்ததாக ‘சந்தோஷ் டிராஃபி’ என்னும் படத்தினை இயக்கவுள்ளார். இதில் நாயகனாக நடித்து, தயாரிக்கவும் இருக்கிறார் ப்ரித்விராஜ். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த ஆண்டு கோடை விடுமுறை வெளியிட படக்குழு உறுதி செய்திருக்கிறது.