Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»கேப்டன் பிரபாகரன் டைட்டில் வந்தது எப்படி? – ஆர்.கே.செல்வமணி விளக்கம்
    சினிமா

    கேப்டன் பிரபாகரன் டைட்டில் வந்தது எப்படி? – ஆர்.கே.செல்வமணி விளக்கம்

    adminBy adminAugust 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கேப்டன் பிரபாகரன் டைட்டில் வந்தது எப்படி? – ஆர்.கே.செல்வமணி விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    விஜயகாந்த் நடிப்பில் அவருடைய 100-வது படமாக வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்.கே.செல்வமணி இயக்கி, 1991-ல் வெளியான இந்தப்படம் 34 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ஆக. 22-ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. ஸ்பேரோ சினிமாஸ் சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இதை வெளியிடுகிறார். இதன் புதிய டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இதில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வசனகர்த்தா லியாகத் அலிகான், மன்சூர் அலிகான், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், ஏ.ஆர் முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “என்னை நம்பி என் அப்பா, அம்மாவே பணம் கொடுக்க யோசித்த நேரத்தில் விஜயகாந்த்தும் ராவுத்தரும் ஒரு கோடி ரூபாய் போட்டு, என்னை நம்பி எடுத்த படம் இது. அன்று ஈழத் தமிழர்களுக்காக, தமிழ் சினிமாவில் இருந்து குரல் கொடுத்த முதல் மனிதர் விஜயகாந்த். அப்போதுதான் இந்த படத்துக்கு ‘பிரபாகரன்’ என பெயர் வைக்க முடிவு செய்தோம். பின் ‘தளபதி பிரபாகரன்’ வைக்கலாம் என்று சொன்னேன். பிறகு திடீரென ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற டைட்டில் தோன்றியது. உடனடியாக அதை வைக்க ஒப்புக்கொண்டார் விஜயகாந்த்.

    இதில் ரம்யா கிருஷ்ணனுக்குப் பதிலாக சரண்யா தான் நடிக்க இருந்தார். ஆனால் அந்த மலைக் கிராம பெண்ணுக்கான உடையை அணிவதிலும் இன்னும் சில பிரச்சினைகளும் இருந்ததால் அவர் இதிலிருந்து விலகிக் கொண்டார். எங்களுடன் 90 நாட்கள் பயணிக்க ஒரு பெண் வேண்டும், அது சாதாரண நடிகையாக இருக்கட்டும், அல்லது புதுமுகமாகக் கூட இருக்கட்டும் என்று நினைத்துத் தேடியபோது தான் ரம்யா கிருஷ்ணன் வந்தார். ஆனால் அவர் இந்த படத்தில் நடித்து 35 வருடங்கள் கழித்தும் கூட அந்த ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலைப் பார்க்கும்போது அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது.

    இதில் சரத்குமார் நடித்தபோது அவருக்குக் கழுத்தில் அடிபட்டுவிட்டது. அதனால் அவரை மாற்றி விடலாமா? என்று நினைத்தபோது, விஜயகாந்த் மறுத்து விட்டார். ‘அவர் வளர்ந்து வரக்கூடிய நடிகர், அவரை நீக்கி விட்டால் அவருடைய திரையுலக வாழ்க்கையை பாதிக்கும், அவர் திரும்பி வந்த பிறகு படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம்’ என பெருந்தன்மையாகக் கூறினார். இப்படி சில விஷயங்களால் படம் தள்ளித்தள்ளிப் போனதால் தான் அவருடைய 100-வது படமான பெருமையை பெற்றது.

    விஜயகாந்த் கதையை மட்டுமே நம்பி வருவார், அவரை பொருத்தவரை அரசியலில் நடிக்கத் தெரியாது. நிஜத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார். அவருக்கு அகமும் புறமும் ஒன்றே. நூறு ஜென்மத்துக்கு சேர வேண்டிய புண்ணியங்களைத் தனது வாரிசுகளுக்காகச் சேர்த்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்” என்று கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ரஜினியை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா?

    August 10, 2025
    சினிமா

    ‘கூலி’ சிறப்புக் காட்சிக்கு ‘வசூல்’ வேட்டை – ரஜினி ரசிகர்கள் புறக்கணிக்க முடிவு

    August 10, 2025
    சினிமா

    சிவகங்கை பின்னணியில் ‘சிறை’!

    August 10, 2025
    சினிமா

    வெற்றி நடிக்கும் ‘பிளாக் கோல்டு’!

    August 10, 2025
    சினிமா

    நாளை நமதே: திரை விமர்சனம்

    August 10, 2025
    சினிமா

    டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் ‘கூலி’

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இரவு நேரத்தில் பழைய குற்றாலம் செல்ல வாகனங்களுக்கு அனுமதி: வனத்துறை நடவடிக்கையால் சர்ச்சை
    • ட்ரம்ப்பின் வரி விதிப்பு: ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு!
    • லாபுபு, ஜிமோமோ மற்றும் மோகோகோ ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு
    • பிஹார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அட்டை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
    • தமிழகத்தில் நாளை முதல் ஆக.16 வரை மழைக்கு வாய்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.