Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»குமஸ்தாவின் பெண்: இளைஞர்களை குரல் கொடுக்க வைத்த படம்! 
    சினிமா

    குமஸ்தாவின் பெண்: இளைஞர்களை குரல் கொடுக்க வைத்த படம்! 

    adminBy adminMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குமஸ்தாவின் பெண்: இளைஞர்களை குரல் கொடுக்க வைத்த படம்! 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வங்க மொழி எழுத்தாளர் நிருபமா தேவியின் ‘அன்னபூர்ணிகா மந்திர்’ என்ற நாவல் பல்வேறு மொழிகளில் அப்போது மொழி பெயர்க்கப்பட்டது. அந்த நாவலை மலையாளத்தில் நாடகமாக உருவாக்கினார்கள். அதைத் தமிழில், ‘குமஸ்தாவின் மகள்’ என்ற பெயரில் டி.கே.சி சகோதரர்கள் நாடகமாக மாற்றி நடத்தி வந்தனர். இந்த நாடகத்துக்கு அண்ணா, ‘குடியரசு’ இதழில் அற்புதமான விமர்சனம் ஒன்றை எழுதினார். மக்களின் வரவேற்பைப் பெற்ற இந்த நாடகத்தை ‘குமஸ்தாவின் பெண்’ என்று பெயர் மாற்றி திரைப்படமாக்கினர்.

    நாடகத்தை ஏற்கெனவே பார்த்திருந்த ஜெமினி பிலிம்ஸ் எஸ்.எஸ்.வாசன், அதில் நாயகியாக நடித்த நடிகையையே, சினிமாவிலும் நடிக்க வைக்கலாம் என்றார். அவர் ‘நடிகை’ அல்ல, நடிகர்தான்’ என்றதும் அவருக்கு ஆச்சரியம். அதில் பெண் வேடமிட்டு நடித்தவர் பின்னர் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் புகழடைந்த ஏ.பி.நாகராஜன்.

    படத்தை பி.என்.ராவ் மற்றும் கே.வி. ஸ்ரீனிவாசன் இயக்கினர். ரஸ்தோம் எம்.இரானிஒளிப்பதிவு செய்தார். (கிருஷ்ணன்) பஞ்சு இந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.மணி என்கிற பணக்காரரிடம் வேலைபார்க்கும் ராமசாமிக்கு சரசா, சீதா என 2 மகள்கள். பொருளாதார நிலை காரணமாக அவரால் அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லை. அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு செல்வந்தரான ராமுவுக்கு சீதாவைத் திருமணம் செய்து வைக்க ஆசைப் படுகிறார், ராமுவின் தாய். தனது சீர்திருத்தக் கொள்கைகளுக்குத் திருமணம் தடையாக இருக்கும் என்பதால் மறுக்கிறார் ராமு. இதனால் வயதான ஒருவருக்கு சீதாவைத் திருமணம் செய்து கொடுக்கிறார், ராமசாமி. அந்த வயதானவர் திடீரென இறந்துவிட, விதவையாகிறார் சீதா.

    இதற்கிடையே பணக்காரர் மணி, சீதாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கிறார். அவரை, ராமு காப்பாற்றுகிறார். தனது நிலையை நினைத்து மனமுடையும் சீதா, தற்கொலை செய்துகொள்கிறார். அவர் தற்கொலைக்கு, தானே காரணம் என நினைக்கும் ராமு, சரசாவைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். அங்கு வரதட்சணை பிரச்சினை தலை தூக்குகிறது. பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும்.

    டி.கே.சண்முகம் ராமுவாக நடித்தார். டி.கே.பகவதி மணியாகவும் எம்.வி.ராஜம்மா சீதாவாகவும் நடித்தனர். ராமசாமியாக சுப்பையா பிள்ளை, சரசாக எம்.எஸ்.திரவுபதி, சீதாவின் வயதான கணவராக ‘ஃபிரண்ட்’ ராமசாமியும் நடித்தனர். மற்றும் கே.ஆர்.ராமசாமி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் காமெடி காட்சிகள் அப்போது ரசிக்கப்பட்டன. நாராயணன் மற்றும் பத்மநாபன் பார்ட்டியின் இசையில் ‘பாறை மனிதா…’ என்ற பாடல் சூப்பர் ஹிட்.

    1941-ம் ஆண்டு இதே தேதியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது இந்தப் படம். அந்த காலத்தில் இளம் பெண்களை, வயதான ஆண்களுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது தாரமாக திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்தது. இந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு, அதற்கு எதிராக இளைஞர்கள் கடுமையாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

    இதே கதையை மையப்படுத்தி ‘குமஸ்தாவின் மகள்’ என்ற பெயரில் படம் இயக்கினார் ஏ.பி.நாகராஜன். 1974-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சிவகுமார், ஆரதி, கமல்ஹாசன் முக்கிய வேடங்களில் நடித்தனர். கமல்ஹாசன் இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ரைட் படத்தில் சமூக அக்கறை விஷயம்! – நட்டி தகவல்

    September 22, 2025
    சினிமா

    தாதா சாகேப் விருதை மலையாள சினிமாவுக்கு அர்ப்பணித்தார் மோகன்லால்!

    September 22, 2025
    சினிமா

    படப்பிடிப்பில் ஜீப் கவிழ்ந்தது: ஜோஜு ஜார்ஜ் காயம்

    September 22, 2025
    சினிமா

    82-வது வருடத்தில் ‘காரைக்கால் அம்மையார்’!

    September 22, 2025
    சினிமா

    நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை: பொதுக்குழுவில் தீர்மானம்

    September 22, 2025
    சினிமா

    “3 நாட்களாக உலகமே தெரியவில்லை” – ரோபோ சங்கர் மகள் உருக்கம்

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பின்புலத்தில் பாஜக, அமித்ஷா இருப்பதால் விஜய் அகந்தைப் பேச்சு: அப்பாவு விமர்சனம்
    • அமிலத்தன்மைக்கான காலை வழக்கம் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நியூயார்க், நியூயார்க்: 9/11 க்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு, முன்னாள் அல்-கொய்தா தலைவர் அஹ்மத் அல்-ஷரா, அன்காவை சிரிய ஜனாதிபதியாக உரையாற்ற | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாயமான கோயில் சொத்துக்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
    • லைலா பைசல்: இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவின் அழகான வதந்தி காதலி லைலா பைசலை சந்திக்கவும்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.