Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, October 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்காக பட்ட கஷ்டங்கள்: சம்பத் ராம் விளக்கம்
    சினிமா

    ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்காக பட்ட கஷ்டங்கள்: சம்பத் ராம் விளக்கம்

    adminBy adminOctober 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்காக பட்ட கஷ்டங்கள்: சம்பத் ராம் விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்காக பட்ட கஷ்டங்கள் குறித்து சம்பத் ராம் விளக்கமளித்துள்ளார்.

    உலகமெங்கும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தெய்வீக சக்தியை அபகரிக்க நினைக்கும் கூட்டத்தின் தலைவனாக சம்பத் ராம் நடித்துள்ளார். முழுக்க கறுப்பு மை கொண்ட மேக்கப் போட்டிருந்ததால் இதனை அடையாளம் காண முடியவில்லை.

    இந்த மேக்கப் மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ குறித்து சம்பத் ராம், “’காந்தாரா சாப்டர்-1’ படத்தில் நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் தலைவனாக குறைந்த காட்சிகள் வந்தாலும், நிறைவான கேரக்டரில் நடித்திருக்கிறேன் என்பதில் சந்தோஷமும் பெருமையும் அடைகிறேன்.

    வித்தியாசமான தோற்றத்தில் ‘காந்தாரா: சாப்டர்-1’ படத்தில் நடித்துள்ளேன். முகம் மற்றும் உடல் முழுவதும் கருப்பு கலர் மேக்கப்பில், குறிப்பாக முகத்தில் முதிர்ந்த முதுமையில் மேக்கப் போட்டு இருப்பேன். மேக்கப் போடுவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். கலைப்பதற்கு ஒரு மணி நேரமாகும். மொத்தத்தில் இரண்டரை மணி நேரம் மேக்கப்பிற்காக ஒதுக்க வேண்டும்.

    மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனர் ரிஷப் ஷெட்டி அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வளவு பெரிய பான் இந்தியா படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். கன்னடத்தில் ‘சயனைடு’ என்ற படத்தில் முதன்முதலில் நடித்திருந்தேன். ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி இருந்தார். அடுத்து அவர் இயக்கிய ‘வீரப்பன் அட்டஹாச’ படத்தில் நான் நடிக்கும் போது, அந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி கடைசி உதவி இயக்குநராக பணியாற்றினார். அப்பொழுது இருந்து அவருக்கும் எனக்குமான பழக்கம் தொடங்கியது.

    சென்னை வந்த போது எங்கள் வீட்டுக்கும் வந்துள்ளார். பிறகு அவர் இயக்கிய ‘காந்தாரா’ படம் வந்த போது, அவரை பாராட்டி போன் செய்தேன். ‘காந்தாரா சாப்டர் -1’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்துவிட்டு, ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு போன் செய்து இந்த படத்தில் நான் நடித்தால் சந்தோஷப்படுவேன் என்று சொன்னேன். உடனே அழைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. எப்பவுமே என்னை மாஸ்டர் என்றுதான் அழைப்பார். சயனைடு படத்தில் என்னுடைய கேரக்டர் பெயர் சுரேஷ் மாஸ்டர்.

    என்னை அழைத்து இந்த படத்தின் கெட்டப்பை ஒன்றரை மணி நேரம் மேக்கப் செய்து பார்த்து ஒப்பந்தம் செய்தார். கிட்டத்தட்ட இந்த படத்திற்காக ஒரு வருடம் பயணித்துள்ளேன். 26 நாட்கள் நடித்துள்ளேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நடித்துள்ளேன். படப்பிடிப்பில் தினமும் குறைந்தது 500 பேரில் இருந்து, 2000 பேர் வரை பணியாற்றுவார்கள். பெரும் கூட்டத்தோடு, பெரும் பொருட்செலவில், பெரும் உழைப்பில் இயக்குநர் உட்பட அனைவருமே பெரும் சிரமப்பட்டு பணியாற்றிய படம் ‘காந்தாரா சாப்டர்-1’

    இந்தப் படம் தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று, நன்றாக ஓடிக் கொண்டிருப்பதை நினைத்து, அதில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுகிறேன். மீண்டும் ஒரு முறை இயக்குனர் ரிஷப் ஷெட்டி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சம்பத் ராம்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ’பைசன்’ தான் என் முதல் படம்: துருவ் விக்ரம்

    October 6, 2025
    சினிமா

    சச்சினின் பாராட்டு: தமன் நெகிழ்ச்சி

    October 6, 2025
    சினிமா

    முதல் சம்பளம்… ‘பட்டாபி எனும் நான்’ – எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 1

    October 6, 2025
    சினிமா

    சாலையோர உணவகத்தில் ரஜினிகாந்த்! – வைரலாகும் புகைப்படம்

    October 6, 2025
    சினிமா

    டியூட் படத்துக்கு மமிதாவை தேர்வு செய்தது எப்படி? – சொல்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

    October 6, 2025
    சினிமா

    பிக் பாஸ் சீசன் 9 தொடக்கம்: போட்டியாளர்களின் முழு பட்டியல்!

    October 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பிஹார் தேர்தல்: நவ.6, 11-ல் வாக்குப் பதிவு; நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!
    • தீர்ப்பு வழங்கியதற்காகவே மோசமாக விமர்சிக்கின்றனர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
    • உடலியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசு 2025 வழங்கப்பட்டது: யார் வெற்றியாளர்கள், அவர்கள் ஏன் வென்றார்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அக்.9ல் கோட்டை முற்றுகை – அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு
    • நம் மூளை மிக வேகமாக வயதாகிறது என்பதற்கான 7 ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை நீண்ட ஆயுள் நிபுணர் வெளிப்படுத்துகிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.