Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ – வ.கெளதமன் பேச்சு
    சினிமா

    காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ – வ.கெளதமன் பேச்சு

    adminBy adminMay 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ – வ.கெளதமன் பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படம் என்று இயக்குநர் வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.

    வ.கெளதமன் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘படையாண்ட மாவீரா’. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் வசந்த பாலன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினரும் கலந்துக் கொண்டனர்.

    இந்த விழாவில் வ.கெளதமன் பேசுகையில், “இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத் துறையையும் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்புதான் பேச வேண்டுமே தவிர, அவன் பேசக்கூடாது என நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி பேச வேண்டியுள்ளது.

    இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்தப் படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத் துறையில் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் ‘படையாண்ட மாவீரா’.

    எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு பற்றியும், ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டியபோது அதற்கு எதிராக நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள்.

    அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான்தான் தாதா போன்று, ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் ‘சந்தனக்காடு’ எடுத்தது போன்று குரு அவர்களின் வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்றுதான் இந்தப் படமே தொடங்கியது.

    இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல, அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள்.

    என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பதுதான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன். இரண்டாவது காடுவெட்டி குருவும், தோழர் தமிழரசனும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன். மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சியப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன்” என்றார் இயக்குநர் கெளதமன்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    “உங்கள் மீதான வியப்பு குறையவே இல்லை” – ரஜினிக்கு ஷங்கர் புகழாரம்

    August 14, 2025
    சினிமா

    முதல் நாள் வசூலில் வியத்தகு சாதனையை நோக்கி ‘கூலி’!

    August 13, 2025
    சினிமா

    50 ஆண்டு கால சினிமா பயணம்: ரஜினிக்கு கமல்ஹாசன் வாழ்த்து

    August 13, 2025
    சினிமா

    “உங்களை நேசிக்கிறோம்…” – ரஜினிக்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து

    August 13, 2025
    சினிமா

    ‘கூலி’ மாஸ் எண்டர்டெயினராக மிகச்சிறப்பாக வந்திருக்கிறது: உதயநிதி ஸ்டாலின்

    August 13, 2025
    சினிமா

    16 வருடத்துக்குப் பிறகு மலையாளத்தில் மீண்டும் சாந்தனு!

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் கைது: காவல் துறை நடவடிக்கை
    • இந்த எளிய 30-வினாடி சமநிலை சோதனை உங்கள் வீழ்ச்சி அபாயத்தை கணிக்க முடியும், குறிப்பாக நடுத்தர வயது பெரியவர்களுக்கு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இறந்துபோன’ வாக்காளர்கள் உடன் தேநீர் விருந்து: தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி பதிவு
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.14, 15-ல் தலைமைச் செயலக பகுதியில் ‘ட்ரோன்’ பறக்க தடை
    • நியூயார்க்கிலிருந்து மியாமி வரை: அமெரிக்காவின் நகரங்கள் 40 ஐத் தாக்கும் முன் ஒவ்வொரு கட்சி காதலரும் பார்வையிட வேண்டும்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.