Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘கண் படுமே பிறர் கண் படுமே வெளியே வரலாமா?’ – காத்திருந்த கண்கள்
    சினிமா

    ‘கண் படுமே பிறர் கண் படுமே வெளியே வரலாமா?’ – காத்திருந்த கண்கள்

    adminBy adminSeptember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘கண் படுமே பிறர் கண் படுமே வெளியே வரலாமா?’ – காத்திருந்த கண்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    இந்திய திரைத்துறையின் ஆரம்ப காலகட்ட வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவர் டி.பிரகாஷ் ராவ். தமிழ், தெலுங்கு, இந்தியில் 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார் அவர். அதில், தமிழில் அமர தீபம், மாதர்குல மாணிக்கம், உத்தமபுத்திரன், படகோட்டி ஆகிய படங்கள் முக்கியமானவை. அவர், வங்க மொழி படத்தின் பாதிப்பில், தமிழில் இயக்கிய திரைப்படம், ‘காத்திருந்த கண்கள்’.

    அப்போதைய தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் பெரும்பாலும் வங்க மொழி நாவல்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்தே உருவாக்கப் பட்டன. இதுவும் அப்படித்தான். அங்கு ‘ஸ்மிரிதி டுக்கு தக்’ என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த நாடகத்தை அதே பெயரில் திரைப் படமாக்கினார்கள்.

    படம் வெற்றி பெற்றதை அடுத்து அதை தமிழில் ரீமேக் செய்தார், டி.பிரகாஷ் ராவ். திரைக்கதையை எம்.எஸ்.சோலைமலை எழுத, வசனத்தை மா.ரா எழுதினார். விஸ்வநாதன்-ராமமுர்த்தி இசை அமைத்தனர். கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.

    ‘ஜெமினி’ கணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, எஸ்.வி. ரங்கா ராவ், கே.பாலாஜி, வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என். லட்சுமி, என்.ஆர். சந்தியா, பண்டரி பாய், வி.எஸ். ராகவன், எஸ்.ராமராவ் மற்றும் கரிகோல் ராஜ் என பலர் நடித்தனர். வறுமை காரணமாகப் பிறக்கும்போதே பிரிகிறார்கள், இரட்டை சகோதரிகளான லலிதாவும் செண்பகமும்.

    லலிதாவை, செல்வந்தரான ரங்கா ராவ் வளர்க்கிறார். செண்பகத்தை, ஏழை தாயான எஸ்.என். லட்சுமி வளர்க்கிறார். உடல் நலமில்லாத லட்சுமிக்குச் சிகிச்சை அளிக்க வருகிறார், மருத்துவர் ஜெமினி கணேசன். செண்பகம் அவரை காதலிக்க, அவர் கண்டுகொள்ளவில்லை.

    ஒரு கட்டத்தில் மரணப்படுக்கைக்குச் சென்றுவிடும் லட்சுமி, தனது மகளுக்கு ஒரு மூத்த சகோதரி இருப்பதைச் சொல்கிறார். இதையடுத்து, தனது சகோதரியைத் தேடிச் செல்கிறார் செண்பகம். இருவரும் ஒரே ரயில் பயணிக்கும்போது விபத்து ஏற்படுகிறது. இப்போது சகோதரிகளில் லலிதா, செண்பகமாகவும் செண்பகம் லலிதாவாகவும் மாறிவிட, பிறகு என்ன நடக்கிறது என்பது திரைக்கதை. சாவித்திரி, இரண்டு வேடங்களில் நடித்தார்.

    இந்தப் படத்தின் வெற்றிக்குப் பாடல்களும் காரணமாக அமைந்தன. சீர்காழி கோவிந்தராஜன் குரலில், ‘ஓடம் நதியினிலே…’, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய, ‘காற்று வந்தால் தலை சாயும் நாணல்’, ‘கண் படுமே பிறர் கண் படுமே நீ வெளியே வரலாமா?’, ‘துள்ளித் திரிந்த பெண்ணொன்று’, ‘வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’, சுசீலா பாடிய, ‘வா என்றது உருவம்’ ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாயின. 1962-ம் ஆண்டு ஆக.25-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தை, வசுமதி பிக்சர்ஸ் சார்பில், டி.கே.ராமசாமி தயாரித்தார். கமால் கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    அனிருத் இசையில்லாமல் படம் பண்ண மாட்டேன்: லோகேஷ் கனகராஜ் உறுதி

    September 2, 2025
    சினிமா

    சிம்பு படத்தின் கதைக்களம்: வெற்றிமாறன் விவரிப்பு

    September 2, 2025
    சினிமா

    டிசம்பரில் வெளியாகிறது ‘வா வாத்தியார்’

    September 2, 2025
    சினிமா

    ரவிக்குமார் இயக்கத்தில் சூரி

    September 2, 2025
    சினிமா

    செப்.4-ல் ஓடிடியில் ‘கண்ணப்பா’ ரிலீஸ்

    September 2, 2025
    சினிமா

    10 நாட்களில் ‘வாடிவாசல்’ அப்டேட்: வெற்றிமாறன்

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அனிருத் இசையில்லாமல் படம் பண்ண மாட்டேன்: லோகேஷ் கனகராஜ் உறுதி
    • தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு
    • தோல் பராமரிப்பு: இந்த பண்டைய இந்திய மசாலா பிரபலங்களுக்கு கண்ணாடி தோல் இருப்பதற்கு உண்மையான காரணம், அதை உங்கள் சமையலறையில் காணலாம்
    • “பெட்டியைப் படியுங்கள்…” எலோன் மஸ்க் கருத்தடை மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் மீது அலாரத்தை எழுப்புகிறார் | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிம்பு படத்தின் கதைக்களம்: வெற்றிமாறன் விவரிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.