Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»‘எஸ்டிஆர் 49′-ல் சந்தானம் இணைந்தது எப்படி? – நடிகர் சிலம்பரசன் விளக்கம்
    சினிமா

    ‘எஸ்டிஆர் 49′-ல் சந்தானம் இணைந்தது எப்படி? – நடிகர் சிலம்பரசன் விளக்கம்

    adminBy adminMay 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘எஸ்டிஆர் 49′-ல் சந்தானம் இணைந்தது எப்படி? – நடிகர் சிலம்பரசன் விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ . பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஆஃப்ரோ இசையமைத்துள்ளார். நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யாவழங்கும் இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அவர் கூறியதாவது: “ஒவ்வொரு படத்துக்கும் அதிகம் மெனக்கெட்டு ரசிகர்களுக்கு வித்தியாசமாக ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் பார்ட் 1, பார்ட் 2 என இரண்டு பாகத்தையும் சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் போதும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாகச் சந்தானத்தின் உடல் மொழிநன்றாக இருக்கிறது.

    சந்தானம் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. இந்தத் தருணத்தில் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு உதவியை செய்கிறீர்கள் என்றால் எதையும் எதிர்பார்க்காமல் செய்யுங்கள். எதிர்பார்ப்பை மனதில் வைத்துக் கொண்டு யாருக்கும் உதவ வேண்டாம். சிலர், நாம் செய்த உதவியை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு உரிய மரியாதையை அளித்து பேசுவார்கள். பலர் அதைப் புறக்கணித்து விடுவார்கள். அது முக்கியமில்லை. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யுங்கள். பழசை மறக்காமல் இருப்பதுதான் சந்தானத்தின் இயல்பு. இப்படம் அவருடைய நெக்ஸ்ட் லெவலாக இருக்கும்.

    ‘எஸ்டிஆர் 49′-ல் நாங்கள் இருவரும் இணைந்து இருக்கிறோம். அது ஏன் என்பதைச் சொல்லவிரும்புகிறேன். இன்றைய சினிமாவில் காமெடி குறைந்து விட்டது. பெரும்பாலான படங்கள் ஆக்‌ஷனாக இருக்கின்றன. சமீபத்தில், ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் பார்த்தேன். அருமையாக இருந்தது. அதுபோன்ற சந்தோஷமான படங்களும் அதிகம் வரவேண்டும். அப்படியான படங்கள் வரவேண்டுமானால் சந்தானம் ஹீரோவாக நடிப்பதோடு, என் போன்ற, ஆர்யா போன்ற, அவருக்குப் பிடித்த இயக்குநர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும். அதற்கான ஆரம்பமாக ‘எஸ்டிஆர் 49’-ல் அவர் இணைந்துள்ளார். இனி அவரை அதிகப் படங்களில் பார்ப்பீர்கள். இவ்வாறு சிலம்பரசன் கூறினார். ஆர்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘நூறு நாள் திரைப்படம் 3’ – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி

    June 30, 2025
    சினிமா

    ‘திடீரென பேய் வரும், திடுக்கிட மாட்டீர்கள்!’ – அவசரக் கல்யாணம்

    June 30, 2025
    சினிமா

    கார்த்தியை ஆச்சரியப்பட வைத்த விஷ்ணு விஷால்!

    June 30, 2025
    சினிமா

    லவ் மேரேஜ்: திரை விமர்சனம்

    June 30, 2025
    சினிமா

    ‘டிராகன்’ வெற்றி முக்கியமானது: 100-வது நாள் விழாவில் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!

    June 30, 2025
    சினிமா

    மீண்டும் இணைகிறது ‘பிரேமம்’ படக்குழு

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
    • க்ளோசெட் டிடாக்ஸ்: நாம் ஒருபோதும் அணியாத ஆடைகளை ஏன் பதுக்கி வைக்கிறோம் என்பதற்குப் பின்னால் உள்ள உளவியல்
    • வெளவால்கள் ஏன் தொற்றுநோய்களுக்கு உலகளாவிய அக்கறை: கடந்த கால மற்றும் வளர்ந்து வரும் வைரஸ்களில் அவற்றின் பங்கைப் பாருங்கள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திண்டுக்கல்லில் கால்பந்து வீரர்கள் தேர்வு!
    • திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றம் கோலாகலம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.