Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»“என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம்” – சரோஜா தேவி குறித்து கமல் உருக்கம்
    சினிமா

    “என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம்” – சரோஜா தேவி குறித்து கமல் உருக்கம்

    adminBy adminJuly 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம்” – சரோஜா தேவி குறித்து கமல் உருக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார்.

    பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “என்னைப் பார்க்கும் இடமெல்லாம் என் எந்த வயதிலும் கன்னம் கிள்ளும் விரலோடு, ‘செல்ல மகனே’ என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா. மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர். மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான ‘பார்த்தால் பசி தீரும்’ படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன. கண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    சரோஜாதேவி கன்னடம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர். இவர் ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உலாவந்து, 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ரசிகர்களால் “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி” போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். இவர் பல திரைப்பட விருதுகளையும், இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் வென்றுள்ளார். அதேபோல, வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. இவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ஊர்வசி – ஜோஜு ஜார்ஜின் ‘ஆஷா’ படப்பிடிப்பு தொடக்கம்

    July 16, 2025
    சினிமா

    மீண்டும் இணையும் பிரபுதேவா – வடிவேலு கூட்டணி!

    July 16, 2025
    சினிமா

    கவின் – பிரியங்கா மோகன் இணையும் புதிய படம்!

    July 16, 2025
    சினிமா

    பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம்!

    July 16, 2025
    சினிமா

    ரூ.9 கோடி இழப்பீடு கோரி ரவி மோகன் வழக்கு: தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    July 16, 2025
    சினிமா

    என் படங்களில் தவறுகளை செய்திருக்கிறேன்: லோகேஷ் கனகராஜ் 

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னையில் ரேங்கிங் டென்னிஸ்!
    • “விமர்சனம் என்ற பெயரில் எங்களுக்கு விளம்பரம் செய்யும் பழனிசாமிக்கு நன்றி!” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு
    • ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: லக்சயா சென் முன்னேற்றம்!
    • சென்னை | விநாயகர் கோயில் இடிப்பை கண்டித்து போராட்டம்: இந்து முன்னணியினர் கைது
    • இந்தியா வருகிறார் உசைன் போல்ட்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.