Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»உதயணன் வாசவதத்​தா: பாகவதர் சிறை சென்றதால் மாறிய ஹீரோ
    சினிமா

    உதயணன் வாசவதத்​தா: பாகவதர் சிறை சென்றதால் மாறிய ஹீரோ

    adminBy adminJune 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    உதயணன் வாசவதத்​தா: பாகவதர் சிறை சென்றதால் மாறிய ஹீரோ
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    உமா பிக்​சர்ஸ் மூலம் படங்​கள் தயாரித்து வந்த ஆர்​.எம்​.ராம​நாதன் செட்​டி​யார், தியாக​ராஜ பாகவதரின் நெருங்​கிய நண்​பர். சென்​னை​யில் இருந்த நியூடோன் ஸ்டூடியோ​வின் நிறு​வனர்​களில் ஒரு​வ​ராக​வும் இருந்த அவருக்​கு, ‘ஆடியோகி​ராஃபி’​யில் தீவிர ஆர்​வம். அதனால் தனது நிறு​வனம் மூலம் தயாரித்த பெரும்​பாலான படங்​களில் ‘ரெக்​கார்​டிஸ்​டா’க​வும் பணி​யாற்​றி​னார். அவர் தயாரித்த ‘உதயணன் வாசவதத்​தா’ படத்​தி​லும் அப்​படித்​தான்.

    இது புராணம் கலந்த கற்​பனை கதை. உத்தர பிரதேசத்​தில் கங்கை மற்​றும் யமுனை ஆற்​றின் அரு​கில் அமைந்​திருந்த வச்த நாட்டை ஆண்​ட​வன், உதயணன். இன்​றைய கோசாம்​பி​தான் அதன் தலைநகர். வீணை வாசிப்​ப​தில் திறமை​யானவ​னான உதயணனின் இசையை கேட்​டு, யானை​கள் கூட அசை​வின்றி நிற்​கும். அவன், இளவரசி வாசவதத்​தாவைக் காதலித்து வரு​கிறான். இதற்​கிடையே உதயணனுக்கு ஒரு தெய்​வீக யானையை பரி​சாக அளிக்​கிறார் இந்​திரன். உதயணன் செய்​யும் தவறால், அது அவரை விட்​டுச் சென்று விடு​கிறது. மனம் வருந்​தும் உதயணன் அதைத் தேடிச் செல்​கிறார்.

    அப்​போது தனது காதலி வாசவதத்​தாவை வேறொரு நாட்​டில் விட்​டுச் செல்​கிறார். அங்கு வேறொரு பெயரில், நடன​மும் இசை​யும் கற்​றுக்​கொடுக்​கிறார் அவர். இந்​நிலை​யில் மரகதகல்​லில் செய்​யப்​பட்ட போலி யானையை காட்டி உதயணனை வரவழைத்து மன்​னன் ஒரு​வன், அவரை கைது செய்​கிறான். அவனுடைய நாட்​டை​யும் கைப்​பற்​றுகிறான். இந்​தச் சிக்​கல்​களில் இருந்து மீண்டு தனது காதலியை உதயணன் எப்​படிக் கைப்​பிடித்​து, நாட்டை மீட்​கிறான் என்​பது கதை.

    இதை அந்த கால​கட்​டத்​தில் பிரபல​மாக இருந்த டி.ஆர்​.ரகு​நாத் இயக்​கி​னார். அவருடைய சகோ​தரர் ராஜா சந்​திரசேகர் இதன் கதையை எழு​தி​னார். முதலில் இதில் நாயக​னாக நடிக்க இருந்​தவர், தமிழ் சினி​மா​வின் முதல் சூப்​பர் ஸ்டா​ரான தியாக​ராஜ பாகவதர். அவர் நடிப்​ப​தாக விளம்​பரங்​கள் கொடுக்​கப்​பட்​டன. ‘இந்​து’ இதழில் முதல் பக்​கத்​தில் தியாக​ராஜ பாகவதர், குதிரை​யில் நிற்​பது போன்ற விளம்​பரம் முழு பக்​கத்​தில் வெளி​யாகி இருந்​தது. பரத​நாட்​டிய கலைஞரும் சிறந்த கர்​னாடக இசைப் பாடகி​யு​மான வசுந்​தரா தேவி நாயகி​யாக நடிக்க ஒப்​பந்​த​மா​னார். அப்​போது அவர் புகழின் உச்​சத்​தில் இருந்​தார். பாகவதரின் குரலில் பாடல்​கள் பதிவு செய்​யப்​பட்​டுப் படப்​பிடிப்பு தொடங்கி நடந்து கொண்​டிருந்த போது, 1945 டிசம்​பர் மாதம் லட்​சுமி காந்​தன் கொலை வழக்​குக்​காகக் கைது செய்​யப்​பட்டு சிறை செல்ல நேரிட்​டது, பாகவதருக்​கு.

    இதனால் அவர் நடித்த காட்​சிகளை நீக்​கி​விட்​டு, கர்​னாடக இசைப் பாடகர் ஜி.என்​.​பாலசுப்​பிரமணி​யனை ஹீரோ​வாக நடிக்க வைத்​தனர். அப்​போது நன்​றாகப் பாடத் தெரிந்​தால், ஹீரோ வாய்ப்பு தேடி வரும். அப்​படித்​தான் இந்த வாய்ப்பு அவருக்​குக் கிடைத்​தது. நாயகி​யாக வசுந்​தரா தேவி நடித்​தார்.

    இவர்​களு​டன் எம்​.எஸ்​.சரோஜா, டி.​பாலசுப்​ரமணி​யம், கே.​சா​ரங்​க​பாணி, காளி என்​.ரத்​னம், சி.டி.​ராஜ​காந்​தம், என்​.கிருஷ்ண​மூர்த்​தி, பி.எஸ்​.வீரப்​பன் (பிறகு​தான் வீரப்பா என பெயர் மாற்​றிக் கொண்​டார்), டி.கே.சம்​பங்​கி, எம்​.​வி.மணி, கொளத்து மணி, ராஜா, கமலம், கே.என்​.​ராஜம் மற்​றும் என்​.​நாகசுப்​ரமணி​யம் என பலர் நடித்​தனர்.

    இந்​தப் படத்​துக்கு உதயகு​மாரும், ஏ.எஸ்​.ஏ.​சாமி​யும் வசனம் எழு​தினர். ஏ.எஸ்​.ஏ.​சாமி பின்​னர் கதாசிரியர் மற்​றும் இயக்​குந​ராக புகழ்​பெற்​றார். எம்​.ஜி.ஆரை ஹீரோ​வாக அறி​முகப்​படுத்​தி​ய​வரும் இவரே. சி.ஆர்​.சுப்​ப​ராமன் இசை அமைத்​தார். பாப​நாசம் சிவன், கம்​ப​தாசன் பாடல்​கள் எழு​தினர். மார்​கஸ் பார்ட்லே ஒளிப்​ப​திவு செய்​தார்.

    வி.பி.​ராமையா பிள்ளை நடனங்​களை அமைத்​தார். நாயகி நடனம் கற்​றுக்​கொடுப்​பவர் என்​ப​தால், கதக், மணிப்​பூரி, பஞ்​சாபி நடனங்​களை காமினி குமார் சின்ஹா அமைத்​தார். இந்​தப் படத்​தில் நடிகர், நடிகைகளுக்​கான உடைகளை எம்.நடேசன் உரு​வாக்​கி​னார். இவர், பின்​னர் தயாரிப்​பாள​ராக மாறி, எம்​.ஜி.ஆரின் மன்​னாதி மன்​னன், ஜெமினி கணேசனின் ஆசை, சிவாஜி கணேசனின் அன்பு என சில படங்​களைத் தயாரித்​தார்.

    1947-ம் ஆண்டு இதே நாளில் வெளி​யான இந்​தப் படத்​தில், ஜி.என். பாலசுப்​பிரமணி​யன், வசுந்​தரா ஆகியோரின் இனிமை​யான பாடல்​கள், நடனம், பிரம்​மாண்ட செட்​டு​கள் இருந்​தா​லும் படம் பெரும் வெற்​றியை பெற​வில்​லை. இந்​தப்​ படம்​ வெளியான ஆண்​டு​தான்​ பாகவதர்​ சிறையி​லிருந்​து விடுதலை செய்​யப்​பட்​டார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ‘தி பாரடைஸ்’ படப்பிடிப்பில் இணைந்த நானி!

    June 29, 2025
    சினிமா

    அனல் அரசு மூலம் என் மகன் அறிமுகமாவது பாக்கியம்: விஜய் சேதுபதி மகிழ்ச்சி

    June 29, 2025
    சினிமா

    10 படங்களை தயாரிக்கும் வேல்ஸ் ஃபிலிம் நிறுவனம்!

    June 29, 2025
    சினிமா

    ‘ராம் மாதிரி இயக்குநர்கள் நமக்கு தேவை’ – இயக்குநர் பாலா

    June 29, 2025
    சினிமா

    மார்கன்: திரை விமர்சனம்

    June 29, 2025
    சினிமா

    கண்ணப்பா: திரை விமர்சனம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருச்சி விமான நிலையத்துக்கு அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
    • மீன்வளத்திற்காக ஒரு செல்ல பெட்டா மீன் பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
    • உலகளாவிய இணைய கவரேஜை விரிவுபடுத்த ஸ்பேஸ்எக்ஸ் 27 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புரி நெரிசல் சம்பவத்துக்கு அலட்சியமும், தவறான நிர்வாகமும் தான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு
    • ‘நான் ஏன் கிளப் உலகக் கோப்பை தொடரில் விளையாடவில்லை என்றால்…’ – ரொனால்டோ ஓபன் டாக்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.