Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, December 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»“இனி அவதூறு பரப்பினால்…” – பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோருக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை
    சினிமா

    “இனி அவதூறு பரப்பினால்…” – பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோருக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை

    adminBy adminJuly 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “இனி அவதூறு பரப்பினால்…” – பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோருக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    நடிகர், நடிகைகள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயில்வான் ரங்கநாதன் உளிட்டோருக்கு நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இணையத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களின் அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது தென்னிந்திய நடிகர் சங்கம். தற்போது இதனை மேலும் தீவிரப்படுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.

    அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவதும், பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் என்றும் எங்கள் தலையாய கடமையாக இருந்து வருகிறது. அந்த வகையில், எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து மிக அவதூறாகவும், ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதுமின்றியும் பல தவறான பொய்யான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த சேகுவாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜெய்சங்கர் என்னும் நபர் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சட்ட ரீதியாக மாண்புமிகு உயர் நீதிமன்றத்தில் வழக்கு (எண்: Crl.O.P.Nos.2978 & 3184 of 2025) தொடுக்கப்பட்டது.

    வழக்கின் கடுமையை உணர்ந்து இனி அவ்விதம் அவதூறாக பதிவிட மாட்டேன் என்று குற்றம்சாட்டப்பட்டவர் உறுதிமொழி தந்து நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்தார். அதனை ஏற்ற நீதிமன்றம், அந்த உறுதி மொழியில் இருந்து அவர் சற்றும் தவறக் கூடாது என்ற கடுமையான உத்தரவின் அடிப்படையில், அந்த நபருக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளது.

    இதைத் தொடர்ந்து சற்று காலம் அவதூறுகள் ஏதும் வெளிவராத நிலையில், சமீப காலமாக மீண்டும் பயில்வான் ரங்கநாதன் என்னும் நபர் உட்பட பலர், எங்கள் சங்கத்தின் பல உறுப்பினர்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் வாரி இறைத்து வருகின்றனர். அவ்விதம் அவதூறு பரப்புபவர்கள் மேற்காணும் வழக்கை மனதில் கொண்டு உடனடியாக அவர்களது இந்த சட்ட விரோத செயலை நிறுத்த வேண்டும்.

    அவ்விதம் நிறுத்தத் தவறும் பட்சத்தில், அவதூறு பரப்பும் அனைவர் மீதும் கடந்த முறையை விட கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலமாக தென்னிந்திய நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுக்கிறது. இனி ஒரு முறை எங்கள் உறுப்பினர்கள் தொடரபான ஆபாசமான அவதூறான கருத்துகளை பதிவேற்றம் செய்பவர்கள் தாமதம் இன்றி சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    கார்த்திக் சுப்பராஜின் புதிய படம் தொடக்கம்

    December 3, 2025
    சினிமா

    குரலற்றவர்களின் குரலே ‘மாஸ்க்’: இயக்குநர் வெற்றிமாறன்

    December 3, 2025
    சினிமா

    நவ.14-ல் ஓடிடியில் ‘டியூட்’ ரிலீஸ்

    December 3, 2025
    சினிமா

    நவ.24 முதல் ‘அரசன்’ படப்பிடிப்பு தொடக்கம்

    December 3, 2025
    சினிமா

    அனுராக் கஷ்யாப் – சாம் ஆண்டன் இணையும் ‘அன்கில்_123’

    December 3, 2025
    சினிமா

    ஷேடோ ஆஃப் த தின் மேன் – 1941: கவனக் குறைவால் சிக்கும் கொலையாளி – ஹாலிவுட் மேட்னி 5

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முட்டைகளால் புற்றுநோய் ஆபத்து இல்லை என்று FSSAI கூறுகிறது, சமூக ஊடக கூற்றுக்களை நிராகரிக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஸ்மார்ட் ட்ராவல் ஹேக்குகள்: சூயிங் கம், புரோட்டீன் ஸ்நாக்ஸ் மற்றும் தூக்கத்திற்கு தேவையான உணவுகள் ஏன் ஒவ்வொரு பயணிகளும் எடுத்துச் செல்ல வேண்டும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘முதல் முறையாக’: மெக்ஸிகோவில் கண்டெடுக்கப்பட்ட கனசதுர வடிவ மண்டை ஓடு அதிர்ச்சியூட்டும் பண்டைய கலாச்சார நடைமுறையை வெளிப்படுத்துகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், காசா இடிபாடுகளை தொழில்நுட்ப மையமாக மாற்ற $112bn திட்டம் உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் கண்பார்வையை சோதிக்கவும்: 20/20 பார்வை கொண்ட ஒருவரால் மட்டுமே ஒற்றைப்படை எண்ணைக் கண்டறிய முடியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.