‘ஆவேஷம்’ இயக்குநர் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.
‘கருப்பு’ படத்தை முடித்துவிட்டு, வெங்கி அட்லுரி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதனை நாக வம்சி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தினை முடிவு செய்துவிட்டார் சூர்யா.
மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க வுள்ளார். இது தொடர்பான சந்திப்புகள் முடிவுற்று, கூட்டணி உறுதியாகி இருக்கிறது. சூர்யா நடிப்பில் 47-வது படமாக இது உருவாகிறது. இப்படத்தினை முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளது.
சூர்யா – ஜீத்து மாதவன் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.