Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 31
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»சினிமா»அனிருத்தை கடத்தி பக்கத்தில் வைத்துக் கொள்வேன்: ‘கிங்டம்’ படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
    சினிமா

    அனிருத்தை கடத்தி பக்கத்தில் வைத்துக் கொள்வேன்: ‘கிங்டம்’ படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு

    adminBy adminJuly 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அனிருத்தை கடத்தி பக்கத்தில் வைத்துக் கொள்வேன்: ‘கிங்டம்’ படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன் என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

    விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இறுதிகட்டப் பணிகள் இருந்ததால் விஜய் தேவரகொண்டா மட்டுமே கலந்து கொண்டார். இதில் விஜய் தேவரகொண்டா பேசும் போது, “என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ ஜூலை 31-ஆம் தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்.

    இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவர் ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற வரவேற்பை நினைவூட்டினார். ஆரம்பத்திலிருந்தே, இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்காகவே செய்ய வேண்டும் என்று தீர்மானித்தோம்.இது ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தொடங்கி, பிறகு இலங்கையிலும் நடைபெறும் கதையாகும். இவை அனைத்தும் ஒரே மாதிரியான கலாசாரம் மற்றும் உணர்வுகளை பகிர்கின்றன.

    இந்தப் படம் உணர்வுகளும் அதிரடியும் கலந்த ஒன்று. அது ரஜினி சார் படங்களை போலவே ஒரு சூழலை உருவாக்கும். ஆந்திரா, தெலுங்கானா முழுவதும் படத்திற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வுகள் நடந்தாலும், தெலுங்கு மாநிலங்களுக்கு வெளியே நான் வந்து விளம்பரப்படுத்துவது என்றால், அது சென்னை மட்டுமே. ஏனென்றால் சென்னை அவ்வளவு பிடிக்கும்.

    இப்படத்தின் டீஸருக்காக பின்னணிக் குரல் கொடுத்த சூர்யா அண்ணாவுக்கு நன்றி. அனிருத் இந்த படத்தின் இசையில் தனது உயிரையும், மனதையும் அர்ப்பணித்துள்ளார். நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன். அனிருத் படத்தின் 40 நிமிஷத்தையே பாராட்ட, ரசிகர்கள் படம் மீது நம்பிக்கையுடன் நின்றார்கள். என் வார்த்தைகளை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அனிருத் சொன்னால் நம்புகிறார்கள். அந்த அளவுக்கு அவருக்கு விசுவாசம் இருக்கிறது.

    ‘கிங்டம்’ கதாபாத்திரத்துக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். ஒரு மாற்றத்துக்காக தலையில் இருந்து மொத்த முடியையும் வலித்து எடுத்தேன். ஆரம்பத்தில் ஒரு கான்ஸ்டபிளாக கதையில் வருகிறேன். பின்னர் பெரிய மாற்றம். விரைவில் ஒரு முழு நீள போலீஸ் கதாபாத்திரம் செய்வதற்கும் நிச்சயமாக ஆர்வமிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    சினிமா

    ரூ.400 கோடி வசூலித்த அறிமுக ஹீரோவின் ‘சையாரா’!

    July 31, 2025
    சினிமா

    வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ‘நீலி’!

    July 31, 2025
    சினிமா

    ‘பான் இந்தியா’ படங்களில் வில்லன் ஆகும் ஹீரோக்கள்!

    July 31, 2025
    சினிமா

    ‘Su From So’: கதை மூலம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் கன்னட திரைப்படம்!

    July 30, 2025
    சினிமா

    ரிஷப் ஷெட்டியின் புதிய படம் அறிவிப்பு!

    July 30, 2025
    சினிமா

    மீண்டும் இணைகிறது ‘தலைவன் தலைவி’ கூட்டணி

    July 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.400 கோடி வசூலித்த அறிமுக ஹீரோவின் ‘சையாரா’!
    • பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணை தலைவர்களாக நியமனம்
    • ஆன்மா தேடும்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள 10 சக்திவாய்ந்த கேள்விகள்
    • வாட்ச்: ஆஸ்திரேலியாவின் வீட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை அறிமுகப்படுத்துவதற்கான முதல் முயற்சி புகைபிடிக்கப்படுகிறது; லிஃப்ட் -ஆஃப் – டைம்ஸ் ஆஃப் இந்தியா 14 வினாடிகள் கழித்து வருகிறது
    • 1965-ம் ஆண்டு நடந்த போரில் 45, 1971-ல் 71 விமானங்களை இழந்தோம்: மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.