Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»3, 5, 8-ம் வகுப்புக்கான ஸ்லாஸ் தேர்வு மதிப்பீடு – கற்றல் நிலையை மேம்படுத்த உத்தரவு
    கல்வி

    3, 5, 8-ம் வகுப்புக்கான ஸ்லாஸ் தேர்வு மதிப்பீடு – கற்றல் நிலையை மேம்படுத்த உத்தரவு

    adminBy adminJuly 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    3, 5, 8-ம் வகுப்புக்கான ஸ்லாஸ் தேர்வு மதிப்பீடு – கற்றல் நிலையை மேம்படுத்த உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசுப் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கான ஸ்லாஸ் தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் கற்றல் நிலையை மேம்படுத்தும் பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன் மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: ”அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட கற்றல் இடைவெளியை கண்டறிய பிப்ரவரி 4, 5, 6-ம் தேதிகளில் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் மாநில அடைவு ஆய்வில் அந்தப் பள்ளி பெற்ற தரநிலை ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் எந்த தர வரிசையில் உள்ளது என்ற விவரத்தை பெற்றோர்கள், எஸ்எம்சி உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு எளிதில் புலப்படும் வகையில் தலைமை ஆசிரியரின் அறையில் இடம்பெற செய்ய வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பள்ளி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 3, 5, 8-ம் வகுப்புக்கு எந்த தரநிலையில் உள்ளது என்ற விவரத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

    தாங்கள் பணிபுரியும் பள்ளியானது மாவட்டத்தில் தலை சிறந்த பள்ளி என ஆய்வறிக்கையில் இடம்பெறத்தக்க வகையில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் அனுபவங்களை கொண்டு நல்ல முடிவுகளை கொண்டு வருவதில் ஈடுபாடுடன் இருத்தல் வேண்டும். கற்றலில் பின்னடைவு உடைய மாணவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும்.

    மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை வாரத்தில் 3 நாட்கள் அலுவலர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒன்றியத்தில், மாவட்டத்தில் குறைந்த தரநிலையுடன் பின்தங்கிய பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்க ளுக்கு சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். சிறந்த முறையில் மாணவர்களை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் பெற வேண்டும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தலைமை ஆசிரியர்கள் 34 பேருக்கு டிஇஓ-ஆக பதவி உயர்வு

    July 12, 2025
    கல்வி

    தமிழகத்தில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் ஜூலை 15-ல் திறப்பு!

    July 11, 2025
    கல்வி

    திறந்தநிலை பல்கலை. பேராசிரியர்கள் போராட்டம் தொடர்கிறது

    July 11, 2025
    கல்வி

    இடைநிலை ஆசிரியர்கள் 2,342 பேர் பணி நியமனம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

    July 11, 2025
    கல்வி

    பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

    July 10, 2025
    கல்வி

    சட்​டப் படிப்​பு​க்​கு விண்​ணப்​பிக்​க அவகாசம் நீட்​டிப்பு

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இரண்டு நாட்கள் பயணமாக ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்
    • நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கேரளா – தமிழகம் இடையிலான 20 சாலைகளிலும் கண்காணிப்பு
    • அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு – முழு விவரம்
    • உலக மக்கள்தொகை தினத்தையொட்டி பேரணி, கருத்தரங்கம்: போட்டியில் வென்றவர்களுக்கு சுகாதார துறை பாராட்டு
    • பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.