Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»3 பேருக்கு நன்னடத்தைக்கான விருதுகள் – காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை வழங்கல்
    கல்வி

    3 பேருக்கு நன்னடத்தைக்கான விருதுகள் – காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை வழங்கல்

    adminBy adminApril 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    3 பேருக்கு நன்னடத்தைக்கான விருதுகள் – காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை வழங்கல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை சார்பில் முதன்முறையாக 3 பேருக்கு நன்னடைத்தைக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    கடந்த 9 ஆண்டுகளாக காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் ‘அரசியல் மற்றும் பொது வாழ்வில் நன்னடத்தைக்கான காயிதே மில்லத் விருதுகள்’ இரண்டு பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10வது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில், காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து, விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்திந்திய கத்தோலிக் கவுன்சில் தலைவர் ஜான் தயால், மஜ்லீஸ் இ முஷாவரத் முன்னாள் தலைவர் நவைத், சப்தவ் மிஷன் நிறுவனர் விபின் குமார் திரிபாதி ஆகிய மூன்று பேருக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா விருதுகளை வழங்கினார்.

    விழாவில் விருந்தினர்கள், விருதாளர்கள் பேசியதாவது: காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச்செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான்: மத நல்லிணக்கத்தை பேணியதற்காக மூன்று பேருக்கு விருது வழங்கப்பட்டது. வழக்கமாக இரண்டு பேருக்கு விருது வழங்கும் நிலையில் இவர்களில் எவர் ஒருவரையும் எந்த இடத்திலும் விலக்க முடியாத அளவு தகுதிகளை கொண்டிருந்தனர். பிரிவினையில் இருந்து பாதுகாக்க வேண்டியது விருதாளர்களின் பொறுப்பு மட்டுமல்ல, அனைவரது பொறுப்பும் கூட.

    உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா: நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிக்கு நேரில் செல்லாமல் தொடர்ந்து வெற்றி பெற்றவர் காயிதே மில்லத். அவரை ஒரு முறை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வளவு எளிமையான மனிதர். இஸ்லாம் எங்கள் வழி, தமிழ் எங்கள் தாய்மொழி என நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டவர்.

    அனைத்திந்திய கத்தோலிக் கவுன்சில் தலைவர் ஜான் தயால்: ஆர்எஸ்எஸ் அரசமைப்பு சட்டத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்துத்துவ இந்தியாவை உருவாக்க துடிக்கிறது. வருணாஸ்ரமத்தை மீண்டும் அமல்படுத்த நினைக்கிறது. பட்டியலின பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இருந்தாலும், பள்ளிகளில் போதிய கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.

    மஜ்லீஸ் இ முஷாவரத் முன்னாள் தலைவர் நவைத் ஹமித்: முஸ்லீம் பெண்களுக்கு அதிகாரமளிக்காத நிறுவனங்கள், காயிதே மில்லத் கல்வி நிறுவன செயல்பாடுகளை பார்க்க வேண்டும். முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு ஐஏஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ்-ஆப் குழு வரை சென்றுள்ளது.

    சப்தவ் மிஷன் நிறுவனர் விபின் குமார் திரிபாதி: காலனிய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய நாம், வகுப்பு வாதத்துக்கு எதிராக போராட வேண்டிய சூழலில் இருக்கிறோம். மனித நேயத்துக்கு முன்னுரிமை அளிப்பதோடு, மனிதனை மையமாக வைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

    நிகழ்வில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.சாதிக், சிஎஸ்ஐ முன்னாள் பேராயர் தேவ சகாயம், அறக்கட்டளைத் தலைவர் சலாவூதின் முகமது அயூப், பொருளாளர் எஸ்.முஸ்தாக் அகமது, இந்து என்.ராம், காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி முதல்வர் எம்.அம்துல் தவாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு – மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

    June 28, 2025
    கல்வி

    பொறியியல் சேர்க்கை தரவரிசை பட்டியல்: முழு கட்ஆப் மதிப்பெண் பெற்று 144 மாணவர்கள் சாதனை

    June 28, 2025
    கல்வி

    பிளஸ்-1 மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 30-ல் வெளியீடு

    June 28, 2025
    கல்வி

    மாணவர் வருகைப் பதிவேட்டில் சாதி விவரம் கூடாது: அரசின் வழிகாட்டுதல்கள் என்னென்ன?

    June 27, 2025
    கல்வி

    “சமூகம், தேசத்துக்காக உங்கள் இலக்கை நிர்ணயுங்கள்” – கல்லூரி விழாவில் ஜெகதீப் தன்கர் பேச்சு

    June 27, 2025
    கல்வி

    பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூலை 7 முதல் கலந்தாய்வு

    June 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமித் ஷா கருத்தால் அதிமுக – பாஜகவில் சலசலப்பு: கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என தொடரும் குழப்பம்
    • பிராடாவின் சர்ச்சைக்குரிய கோலபுரி சாப்பல்: கலாச்சார ஒதுக்கீடு அல்லது உத்வேகம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!
    • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், சூளைமேடு அஞ்சுகம் பள்ளிகளில் ரூ.14 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
    • ஒரு உறவின் ஆரம்பத்தில் அர்ப்பணிப்பு சிக்கல்களை வெளிப்படுத்தும் 7 நுட்பமான சிவப்புக் கொடிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.