
சென்னை: அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 10,000 மாணவர்களுக்கு ரூ.12 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கூறினார்.
இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் ஸ்டார்ஸ் திட்டத்தில் நடப்பாண்டில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உயர்கல்வியைப் பெறும் வகையில் ‘அனைவருக்கும் உயர் கல்வி’ அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் பேருக்கு ரூ.12 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

