சென்னை: தமிழகத்தில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகால அட்டவணை அக்டோபரில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் அட்டவணை நவம்பர் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘அட்டவணை தயாரிப்பு பணிகள் முடிந்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், நவ.4-ல் வெளியிட திட்டமிட்டுள் ளோம். அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலை கருத்தில் கொண்டு தேர்வு தேதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்றனர்.

