Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»10-ம் வகுப்பு பொது தேர்வில் 94% மாணவர்கள் தேர்ச்சி: மாணவர்களை விட மாணவிகளே முன்னிலை!
    கல்வி

    10-ம் வகுப்பு பொது தேர்வில் 94% மாணவர்கள் தேர்ச்சி: மாணவர்களை விட மாணவிகளே முன்னிலை!

    adminBy adminMay 17, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    10-ம் வகுப்பு பொது தேர்வில் 94% மாணவர்கள் தேர்ச்சி: மாணவர்களை விட மாணவிகளே முன்னிலை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்​தில் 10-ம் வகுப்பு (எஸ்​எஸ்​எல்​சி) பொதுத் தேர்வு எழு​திய 8.71 லட்​சம் மாணவர்​களில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்​துள்​ளனர். வழக்​கம்​போல இந்த ஆண்​டும் மாணவி​களே தேர்ச்​சி​யில் முன்​னிலை பெற்​றுள்​ளனர். 1,867 அரசுப் பள்​ளி​கள் உட்பட மொத்​தம் 4,917 பள்​ளி​கள் 100 சதவீத தேர்ச்சி பெற்​றுள்​ளன.

    தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் 10, 11, 12-ம் வகுப்​பு​களுக்கு ஆண்​டு​தோறும் பொதுத் தேர்வு நடத்​தப்​படு​கிறது. இந்த ஆண்​டுக்​கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம் முழு​வதும் 4,113 மையங்​களில் கடந்த மார்ச் 28 முதல் ஏப்​ரல் 15-ம் தேதி வரை நடை​பெற்​றது. தேர்வு எழுத 8.87 லட்​சம் மாணவர்​கள் பதிவு செய்​தனர். 4.36 லட்​சம் மாணவர்​கள், 4.35 லட்​சம் மாணவி​கள் என மொத்​தம் 8.71 லட்​சம் பேர் தேர்​வில் பங்​கேற்​றனர். இடைநிற்​றல் உள்​ளிட்ட காரணங்​களால் 15,652 பேர் பங்​கேற்​க​வில்​லை.

    88 முகாம்​களில் விடைத்​தாள் திருத்​தும் பணி ஏப்​ரல் 21-ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடந்​தது. தேர்வு முடிவு​கள் மே 19-ம் தேதி வெளி​யாகும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், அனைத்து பணி​களும் முன்​கூட்​டியே முடிந்​த​தால் மே 16-ம் தேதியே முடிவு​களை வெளி​யிட தேர்​வுத் துறை திட்​ட​மிட்​டது.

    அதன்​படி, சென்னை டிபிஐ வளாகத்​தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு​களை பள்​ளிக்​கல்வி துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் நேற்று காலை 9 மணிக்கு வெளி​யிட்​டார். அடுத்த சில நிமிடங்​களில், மாணவர்​களின் செல்​போன் எண்​ணுக்கு குறுஞ்​செய்தி (எஸ்​எம்​எஸ்) மூல​மாக​வும், பள்​ளி​களுக்கு மின்​னஞ்​சல் மூல​மாக​வும் மதிப்​பெண்​களு​டன் தேர்வு முடிவு​கள் அனுப்​பப்​பட்​டன.

    தேர்வு எழு​தி​ய​தில் 4.17 லட்​சம் மாணவி​கள், 4 லட்​சம் மாணவர்​கள் என மொத்​தம் 8.17 லட்​சம் பேர் (93.80%) தேர்ச்சி அடைந்​துள்​ளனர். இது கடந்த ஆண்​டை​விட (91.55%) 2.25 சதவீதம் அதி​கம். மாணவி​கள் 95.88 சதவீத​மும், மாணவர்​கள் 91.74 சதவீத​மும் தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

    தேர்ச்சி விகிதத்​தில் மாணவர்​களை ​விட மாணவி​கள் 4.14 சதவீதம் அதி​கம். 2013-ம் ஆண்​டில் இருந்து பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்​தில் தொடர்ந்து மாணவி​களே முன்​னிலை​யில் உள்​ளனர். 23,769 தனி தேர்​வர்​களில் 9,616 பேர் (40.46%) மட்​டுமே தேர்ச்சி பெற்​றுள்​ளனர். 12,290 மாற்​றுத் திறன் மாணவர்​களில் 11,409 (92.83%) பேரும், 237 கைதி​களில் 230 (97.05%) பேரும் தேர்ச்சி அடைந்​துள்​ளனர்.

    7,555 மேல்​நிலைப் பள்​ளி​கள், 4,930 உயர்​நிலைப் பள்​ளி​கள் என மொத்​தம் 12,485 பள்​ளி​களை சேர்ந்த மாணவர்​கள் தேர்வு எழு​தினர். இதில் 1,867 அரசுப் பள்​ளி​கள்உட்பட மொத்​தம் 4,917 பள்​ளி​கள்100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்​துள்​ளன. கடந்த 2024-ம் ஆண்டு இந்த எண்​ணிக்கை 4,105 ஆக இருந்​தது. அரசு பள்​ளி​கள் 91.26%, அரசு உதவி பெறும் பள்​ளி​கள் 93.63%, தனி​யார் சுயநிதி பள்​ளி​கள் 97.99% தேர்ச்சி பெற்​றுள்​ளன. இதில், தனி​யார் பள்​ளி​களில் தேர்ச்சி விகிதம் அதி​க​மாக உள்​ளது. அதே​போல, இரு​பாலர் பள்​ளி​கள் 94.06%, பெண்​கள் பள்​ளி​கள் 95.36%, ஆண்​கள் பள்​ளி​கள் 97.84% தேர்ச்சி பெற்​றுள்​ளன. ஆண்​கள் பள்​ளி​களை​விட, பெண்​கள் பள்​ளி​கள் அதிக தேர்ச்​சியை அடைந்​துள்​ளன.

    பொதுத் தேர்வு எழுத முடி​யாதவர்​கள், தேர்​வில் வெற்றி வாய்ப்பை இழந்​தவர்​கள் இந்த கல்வி ஆண்​டிலேயே உயர்​கல்​வியை தொடர ஏது​வாக, ஜூலை 4-ம் தேதி முதல் துணைத் தேர்வு நடத்​தப்பட உள்​ளது. இத்​தேர்​வுக்கு பள்ளி மாணவர்​கள் தாங்​கள் படித்த பள்​ளி​கள் மூல​மாக​வும், தனி தேர்​வர்​கள் தேர்​வுத் துறை சேவை மையங்​கள் மூல​மாக​வும் மே 22 முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம். இதுகுறித்த கூடு​தல் விவரங்​களை www.dge.tn.gov.in எனும் தளத்​தில் அறிந்து கொள்​ளலாம்.

    சிவகங்கை மாவட்​டம் முதல் இடம்: ஒட்​டுமொத்த தேர்ச்​சி​யில் மாவட்​டங்​கள் அளவில் 98.31 சதவீதத்​துடன் சிவகங்கை முதல் இடம் பெற்​றுள்​ளது. விருதுநகர் (97.45%),தூத்​துக்​குடி (96.76%), கன்​னி​யாகுமரி (96.66%), திருச்சி (96.61%) ஆகிய மாவட்​டங்​கள் அடுத்​தடுத்த நிலை​யில் உள்​ளன. வேலூர் (85.44%) கடைசி இடத்​தில் உள்​ளது.தலைநகர் சென்​னை​யில் தேர்ச்சி 90.73 சதவீத​மாக உள்​ளது.கடந்த ஆண்டு அரியலூர் மாவட்​டம் முதல் இடம் பிடித்​தது. இந்த ஆண்டு அங்கு தேர்ச்சி விகிதம் குறைந்​து, முதல் 5 இடங்​களில்​கூடஇடம்​பெற​வில்​லை. கல்​வி​யில் பின் ​தங்​கிய மாவட்​டங்​களில் ஒன்​றாக கருதப்​படும் சிவகங்கை மாவட்​டம் இந்த ஆண்டு முதல் இடம் பிடித்​திருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.அரசுப் பள்​ளி​கள் பிரி​விலும் சிவகங்கை (97.49%) மாவட்​டம் முதல் இடம் பிடித்​துள்​ளது, விருதுநகர் (95.57%), கன்​னி​யாகுமரி (95.47%) மாவட்​டங்​கள் 2, 3-ம் இடங்​களை பெற்​றுள்​ளன. இதி​லும்​ வேலூர்​ (82.17%) மாவட்​டம்​ கடைசி இடத்​தில்​ உள்​ளது.

    23,444 பேர் நூற்றுக்கு நூறு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெவ்வேறு பாடங்களில் 23,444 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 10,838 பேர் ‘சென்டம்’ எடுத்துள்ளனர். தமிழ் 8 பேர், ஆங்கிலம் 346 பேர், கணிதம் 1,996 பேர், அறிவியல் 10,838 பேர், சமூக அறிவியல் 10,256 பேர் என 23,444 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    வெளிநாட்டு பல்கலை. அங்கீகாரமற்ற படிப்புகள் – மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

    August 5, 2025
    கல்வி

    ஐடிஐ மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு: வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவிப்பு

    August 5, 2025
    கல்வி

    இந்த ஆண்டு முதல்முறையாக பிஎட் சேர்க்கைக்கு இணைய வழியில் கலந்தாய்வு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

    August 5, 2025
    கல்வி

    மாற்றுத் திறனாளி மாணவரின் மருத்துவராகும் கனவு நிறைவேறுமா? – கல்வி கட்டணத்துக்கு பரிதவிப்பு

    August 4, 2025
    கல்வி

    கல்வி கட்டணம் செலுத்த நெருக்கடி தரும் தனியார் பள்ளிகள் – கானல் நீராகும் கல்வி உரிமை சட்டம்!

    August 4, 2025
    கல்வி

    சாட்ஜிபிடி மூலம் ஏஐ செயலி உருவாக்க பயிற்சி: சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது

    August 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விநாயகர் சதுர்த்தி: ராமநாதபுரத்தில் 600-க்கும் அதிகமான இடங்களில் சிலை வைத்து வழிபட ஏற்பாடு
    • 5 சிறந்த தந்திரங்கள் ஒரு இனிமையான தர்பூசணியைத் தேர்ந்தெடுத்து தட்டுவதைத் தவிர்க்க | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தவெக 2-வது மாநில மாநாடு தேதி மாற்றம்: புதிய தேதியை அறிவித்தார் விஜய்!
    • உங்கள் படுக்கையறை கதவை மூடியதன் மூலம் நீங்கள் ஏன் எப்போதும் தூங்க வேண்டும்: உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு சிறிய பழக்கம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சிட்னி ஸ்வீனியின் ‘ஜீன்ஸ்’ விளம்பரமும்; டொனால்டு ட்ரம்ப்பின் ரியாக்‌ஷனும்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.