Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»வேளாண், உணவு சூழல் அமைப்பை மேம்படுத்த தமிழக அரசுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
    கல்வி

    வேளாண், உணவு சூழல் அமைப்பை மேம்படுத்த தமிழக அரசுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

    adminBy adminJune 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வேளாண், உணவு சூழல் அமைப்பை மேம்படுத்த தமிழக அரசுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில், வேளாண் மற்றும் உணவு சூழல் அமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, மாநில அரசுடன், சென்னை ஐஐடி இணைந்து செயல்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதுதொடர்பாக, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்தும் நோக்கில், மாநில அரசுடன், சென்னை ஐஐடி கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் நிலையான கிராமப்புற மேம்பாடு, வேளாண் வணிக கண்டுபிடிப்பு உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

    உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான உயர் அமைப்பாக செயல்படும் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்துடன், சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் செயலர் அதுல் ஆனந்த் முன்னிலையில் அண்மையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அப்போது பேசிய அதுல் ஆனந்த், கிராமப்புற விநியோகச் சங்கிலிகளை மாற்றுவதற்கும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும், புதுமை மற்றும் ஒத்துழைப்பு மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் மாநில அரசின் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

    இந்த கூட்டு முயற்சியின் நன்மைகளை குறிப்பிட்ட ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, ஆராய்ச்சி, பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் சந்தைப்படுத்தும் திறன்கள் ஆகியவற்றின் மூலம் தமிழத்தின் வேளாண் வணிகச் சூழல் அமைப்பில் செயல்பாட்டுத் திறன், சந்தைப் படுத்துதல், நிலைத் தன்மையை மேம்படுத்தப்படும்” என்றார்.

    தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் கே. அழகுசுந்தரம், தமிழகத்தில் கிராமப்புற நுண் நிறுவனங்களை உலகளாவிய சந்தைகளுடன் இணைப்பதன் உத்திசார் முக்கியத்துவத்தையும், உணவு பதப்படுத்தும் துறையில் திறன் மற்றும் போட்டித் தன்மையை அதிகரிக்க கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் விளக்கினார்.

    இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், வேளாண் வணிகத்தில் கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன் அளிக்கப்படும். விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்தி உணவு வீணாவது குறைக்கப்படும், சந்தை அணுகல் மற்றும் ஏற்றுமதி திறன் மேம்படுத்தப்படும். பேக்கேஜிங், பிராண்டிங் மற்றும் தயாரிப்பு சந்தைப்படுத்தலும் மேம்படுத்தப்படும். அரசு திட்டங்கள் மதிப்பீடு செய்யப்படும்.

    புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், ஐஐடி டீன் மனு சந்தானம், மேலாண்மை ஆய்வுத் துறைத் தலைவர் சஜி மேத்யூ, தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் வி. பழனிமுத்து, தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். பெலிக்ஸ், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கே.என். செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    கர்நாடகாவில் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற 33 சதவீத மதிப்பெண்: பரிந்துரையை பரிசீலிக்கிறது அரசு

    July 27, 2025
    கல்வி

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆக.4 முதல் கலை திருவிழா போட்டிகள்

    July 27, 2025
    கல்வி

    கனவு நிறைவேறுமா? – நாளை அப்துல் கலாமின் 10-வது நினைவு தினம்!

    July 26, 2025
    கல்வி

    பொறியியல் சேர்க்கை 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

    July 26, 2025
    கல்வி

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது: தரவரிசையில் நெல்லை மாணவர் முதல் இடம்

    July 26, 2025
    கல்வி

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கர்நாடகாவில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உண்டு உறைவிட பள்ளிகள் தொடக்கம்
    • வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – ஓய்வு நீதிபதிகள் எதிர்ப்பது ஏன்?
    • ஏற்ற இறக்கம் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது: பொருளாதார நிபுணர் பத்மநாபன் தகவல்
    • மாரீசன் – திரை விமர்சனம்
    • காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறக்க வாய்ப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.