
காட்டாங்கொளத்தூர்: வாழ்க்கையில் பண்புள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்று நீதிபதி மு.கற்பகவிநாயகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்ப்பேராயம் விருதுகள் வழங்கப்படு கின்றன. சிறுகதைகள், அறிவியல், நாடகம், மொழிபெயர்ப்பு என பல்வேறு துறைகளில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து, 11 படைப்பாளிகளுக்கு தமிழ்ப்பேராயம் விருதும், பணமுடிப்பும் வழங்கப்படும்.
இதன்படி, 15-வது ஆண்டு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழ்ப்பேராயம் புரவலரும், எஸ்ஆர்எம் பல்கலை. வேந்தருமான பாரி வேந்தர் தலைமை வகித்தார். தமிழ்ப்பேராயம் தலைவர் கரு.நாகராசன் வரவேற்றார். மொத்தம் 11 தலைப்புகளில், ரூ.11.90 லட்சம் மதிப்பிலான தமிழ்ப்பேராய விருதுகளை ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மு.கற்பக விநாயகம் வழங்கினார்.

