Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»கல்வி»மாநில அளவிலான இலக்கிய மன்றப் போட்டி: 72 மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பரிசு வழங்கினார்
    கல்வி

    மாநில அளவிலான இலக்கிய மன்றப் போட்டி: 72 மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பரிசு வழங்கினார்

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மாநில அளவிலான இலக்கிய மன்றப் போட்டி: 72 மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பரிசு வழங்கினார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா மற்றும் இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற 72 பேருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பரிசுகள் வழங்கினார்.

    தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு இலக்கியம், வினாடி வினா, சிறார் திரைப்படப் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலும், வட்டார அளவில் வென்றவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலும் பங்கேற்றனர்.

    இதில் பள்ளி அளவில் 7 லட்சத்து 55,939 மாணவர்களும், வட்டார அளவில் ஒரு லட்சத்து 51,699 மாணவர்களும், மாவட்ட அளவில் 7,576 மாணவர்களும், மாநில அளவில் 722 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    மாநில அளவிலான போட்டிகளில் 72 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதேபோல், பள்ளி மாணவர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளை தேர்வு செய்து தலா ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவிக்கு ‘இளம் கவிஞர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கல்வியாண்டு நடத்தப்பட்ட போட்டிகளில் இருந்து மாநில அளவில் மாணவர் நா.மோகன் (அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தேக்கம்பட்டி, தேனி), ரா.சண்முக ஷிவானி (அரசு மேல்நிலைப் பள்ளி, அரியக்குடி, சிவகங்கை) ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

    இவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் இன்று (மார்ச் 26) நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தர மோகன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுதவிர மாநில அளவிலான மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய 274 மாணவர்களுககு 3 நாட்கள் பயிற்சியானது சென்னையில் அளிக்கப்பட்டது. இந்த போட்டிகள் மற்றும் சிறப்பு பயிற்சியை நடத்துவதற்கு ரூ.1.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 114 மாணவர்கள் மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இந்த சுற்றுலாவுக்காக ரூ.3 கோடி ஒதுக்கபபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    கல்வி

    தேசிய விளையாட்டு தின கொண்டாட்டம்: கல்லூரிகளில் போட்டிகளை நடத்த யுஜிசி உத்தரவு

    August 24, 2025
    கல்வி

    முதுகலை பொறியியல் படிப்பு – ‘கேட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆக.25 முதல் விண்ணப்பிக்கலாம்

    August 22, 2025
    கல்வி

    பொறியியல் சேர்க்கை துணை கலந்தாய்வு தொடக்கம்

    August 22, 2025
    கல்வி

    திறனறி தேர்வுகளை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம்தோறும் பயிற்சி: பள்ளிக்கல்வித் துறையின் புதிய முன்னெடுப்பு

    August 22, 2025
    கல்வி

    போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்

    August 21, 2025
    கல்வி

    மெய்நிகர் நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி?

    August 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: ஸ்டாலின் பெருமிதம்
    • யாரோ முதுமை ஆபத்தில் இருக்கக்கூடும் என்பதற்கான 5 அறிகுறிகளை நரம்பியல் நிபுணர் வெளிப்படுத்துகிறார்
    • பிஹார் வாக்காளார் பட்டியலில் இடம்பெற்ற பாக். பெண்களின் பெயரை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை
    • ரூ.100 கோடி வசூலை கடந்தது ‘தலைவன் தலைவி’
    • ராமநாதபுரத்தில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதியளித்து திமுக துரோகம்: அன்புமணி கண்டனம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.